Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
  • உங்கள் பிரதேசத்தில் இடம்பெரும் செய்திகளையும் எங்களுக்கு அனுப்பலாம் e-mail : aasathsmart@yahoo.com phone:+94779028439

இலங்கையை வந்தடைந்தார் நவநீதம்பிள்ளை

Sunday, August 250 comments


ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இலங்கையை வந்தடைந்துள்ளார்.

இன்று காலை 9.50 மணியளவில், ஜேர்மனியிலிருந்து யுஎல்558 என்ற விமானம் மூலம் இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். இவருடன் நான்கு பிரதிநிதிகள் வருகை தந்ததாகவும் அறியமுடிகின்றது.

ஒரு வார கால விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இவர், எதிர்வரும் 31 ஆம் திகதி வரை 7 நாட்கள் இங்கு தங்கியிருப்பதோடு வடக்குக்கு இரண்டு நாள் பயணத்தை மேற்கொள்ள உள்ளார்.



தனது வடக்குப் பயணத்தின் போது அவர் மீளக்குடியமர்த்தப்பட்ட மக்கள், யாழ்ப்பாணத்தின் நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்கள் ஆகியோரைச் சந்திக்கவுள்ளார்.

இலங்கையின் மனித உரிமைகள் விவகாரம், சமகால அரசியல் நிலைமைகள், கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் முன்னேற்றம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து தனது பயணத்தின் போது விரிவாக ஆராயவுள்ள மனித உரிமைகள் ஆணையாளர், அது தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் அறிக்கை ஒன்றையும் சமர்ப்பிக்கவுள்ளார்.

அத்துடன், தமது இந்த பயணத்தின் பின்னர் அவர் பக்கச்சார்பற்ற அறிக்கை ஒன்றை சமர்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில், யுத்தத்தின் பின்னர் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட மீளக் குடியமர்வுகள் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளை நேரில் அவதானிக்கவுள்ளார்.
Share this article :

Post a Comment

 
Support : www.aasathmirror.com | Pusat Promosi
Copyright ©www.aasathmirror.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Modify by