அரசாங்கத்துடன் உள்ள 3 சிறுபான்மைக்
கட்சிகளின் தலைவர்கள் எதிர்வரும் 3 மாகாணசபையிலும் இணைந்து தேர்தல்
நடாத்துவதற்காக ரணில் விக்கிரமசிங்கவுடன் இரகசிய பேச்சுவார்த்தை
நடாத்துவதாக இன்றைய லக்பிம சிங்கள பத்திரிகையில் தலைப்புச் செய்தி
வெளியிட்டுள்ளது.
இதில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ்,
அமைச்சர் தொண்டமானின் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சி மற்றும் மலையக
மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளின் தலைவர்களே இரகசிய பேச்சுவார்த்தை
நடாத்துவதாகவும் தெரிவித்துள்ளது.
இப் பேச்சுவார்த்தையின்போது இந்தியாவைச்
சேர்ந்த சிங்கப்பூரில் வசிக்கும் தமிழ் வர்த்தகர் ஒருவரும் உடன் இருந்தாக
அச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment