சர்வதேசக் கிரிக்கெட் சபையின் உலக டுவென்டி டுவென்டி தர வரிசையில் இலங்கை அணி தொடர்ந்தும் முதலிடத்தைப் பெற்றுள்ளது. ஐ. சி. சி. வெளியிட்டுள்ள வருடாந்த தரப்படுத்தலிலேயே இலங்கை அணியின் முதலிடம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஓகஸ்ட் முதலாம் திகதி, 2010 ஆம் ஆண்டிற்குப் பின்னர் இடம் பெற்ற போட்டிகளைக் கருத்திற் கொண்டு இந்தத் தரப்படுத்தல் வெளியிடப்பட்டுள்ளது.
டுவென்டி – டுவென்டி சர்வதேசப் போட்டிகளில் விளையாடுவதற்கு அந்தஸ்து பெற்றுள்ள 16 நாடுகளில் கனடா, ஆப்கானிஸ்தான் ஆகிய 2 நாடுகளைத் தவிர ஏனைய 14 நாடுகளும் புதிய தரப்படுத்தலில் சேர்க்கப்பட்டுள்ளன.
கனடா, ஆப்கானிஸ்தான் ஆகிய 2 நாடுகளும் தரப்படுத்தலுக்குத் தேவையான 8 போட்டிகளிலும் விளையாடாத காரணத்தால் தரப்படுத்தலில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. இதில் முதலிடத்தில் காணப்படும் இலங்கை அணி, தற்போதைய உலக டுவென்டி டுவென்டி சம்பியன்களான மேற்கிந்தியத் தீவுகள் அணியை விட 7 புள்ளிகள் உயர்வாகக் காணப்படுகிறது.
Post a Comment