Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
  • உங்கள் பிரதேசத்தில் இடம்பெரும் செய்திகளையும் எங்களுக்கு அனுப்பலாம் e-mail : aasathsmart@yahoo.com phone:+94779028439

13இல் கை வைப்பது சிறுபான்மை மக்களின் உரிமைகளில் கை வைப்பதற்கு சமனாகும்-கல்முனை மேயர்

Sunday, July 70 comments


.


கல்முனை மாநகர மேயர் சிராஸ் மீராசாஹிப் விசேட பேட்டி

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்கின்ற அந்த இயக்கத்துக்கு கட்சியின் தலைமைத்துவத்துக்கு கட்டுப்பட்டு நடப்பேன். என்னை முதல்வர் பதவியில் அமர வைத்தது இந்தக் கட்சியும் மக்களுமாவர். எனவே தலைமைத்துவம் எடுக்கின்ற முடிவுக்கு எப்போதும் கட்டுப்பட்டவனாக இருப்பேன்.

கல்­முனை மாந­கர சபையின் முதல்வர் என்ற வகையில் என்னால் முடிந்­த­ளவு எனது அதி­கா­ரங்­க­ளுக்கு உட்­பட்டு மக்­க­ளுக்கு சேவை­யாற்­றி­வ­ரு­கின்றேன். தொடர்ந்தும் உச்­ச­பட்­ச­மாக மக்­க­ளுக்கு சேவை­யாற்­ற­வேண்டும் என்­பதில் அர்ப்­ப­ணிப்­புடன் இருக்­கின்றேன். எனவே எனது காலப்­ப­கு­தியில் மக்கள் எனக்கு ஒத்­து­ழைப்பு வழங்­க­வேண்டும் என்று கோரு­கின்றேன் என்று கல்­முனை மாந­கர சபை மேயர் டாக்டர் சிராஸ் மீரா­சாஹிப் தெரி­வித்தார்.
எதிர்­கா­லத்தில் மக்கள் எவ்­வா­றான தீர்­மா­னங்­களை எடுக்­கின்­ற­னரோ அதற்கு நான் தலை வணங்­குவேன். என்னை பாரா­ளு­மன்­றத்­துக்கு அனுப்ப மக்கள் தீர்­மா­னித்தால் அத­னையும் ஏற்க நான் தயா­ராக இருக்­கின்றேன். இறை­வனும் அதற்­கான சந்­தர்ப்­பத்தை வழங்கி கட்­சியும் அனு­ம­தித்தால் அதனை பரி­சீ­லிக்க தயா­ராக இருக்­கின்றேன். கட்சித் தலை­மையின் தீர்­மா­னத்­துக்கு நான் எப்­போதும் தலைவணங்­குவேன் என்றும் அவர் குறிப்­பிட்டார்.
 
‘கேச­ரி’க்கு வழங்­கிய விசேட செவ்­வி­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.
 
செவ்­வியின் முழுவிபரம் வரு­மாறு:
 
கேள்வி:  கல்­முனை மாந­கர சபைக்­குட்­பட்ட பகு­தி­களில் அபி­வி­ருத்தி செயற்­பா­டுகள் எவ்­வாறு உள்­ளன?
 
பதில்: 2011 ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாதம் நான் கல்­முனை மாந­கர சபையை பொறுப்­பேற்­ற­போது அங்கு பின்­தங்­கிய நிலைமை காணப்­பட்­டது. அதன் பின்னர் நாங்கள் மாந­கர சபையை மக்­கள்­ம­யப்­ப­டுத்தி செயற்­பட்­டு­வ­ரு­கின்றோம். குப்­பை­களை அகற்­று­வதும் மின்­கு­மிழ்­களை பொருத்துவதும்தான் மாந­க­ர சபையின் பணி என நினைத்­துக்­கொண்­டி­ருக்­கின்­றனர். ஆனால் அது அப்­ப­டி­யல்ல. பல அபி­வி­ருத்தித் திட்­டங்­களை மாந­க­ர­சபை மூலம் முன்­னெ­டுத்­துள்ளோம். குறிப்­பாக கல்­முனை மாந­க­ரத்­துக்குள் கூடு­த­லான பாதை­களை செப்­ப­னிட்­டுள்ளோம்.
 

அதே­போன்று, அதி­க­ளவு குப்­பை­களை அகற்றும் உள்­ளூ­ராட்சி நிறு­வ­ன­மாக எமது மாந­கர சபை உள்­ளது. சுமார் 40 தொடக்கம் 50 தொன் வரை குப்­பை­களை மாதாந்தம் அகற்­றி­வ­ரு­கின்றோம். அது­மட்­டு­மன்றி பல அபி­வி­ருத்­தித்­திட்­டங்­களை முன்­னெ­டுத்­து­வ­ரு­கின்றோம். வாசிக சாலை­களை தர­மு­யர்த்­தி­யுள்ளோம். பீச் பாக் திட்டம் ஒன்றை நிர்­மா­ணித்­து­வ­ரு­கின்றோம். எமது மக்கள் மாலை நேரங்­களை பிள்­ளை­க­ளுடன் உல்லாசமாக பொழுதைக் கழிப்­ப­தற்கு பீச் பாக் ஒன்றை உரு­வாக்­கி­ வ­ரு­கின்றோம். இதற்கு உள்­ளூ­ரி­லேயே பல எதிர்ப்­புக்கள் வந்­தன. ஆனால் அவற்றை முறி­ய­டித்து அதனை அமைப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுத்­துள்ளோம். ஒன்­றரை கோடி ரூபா செலவில் இதனை மேற்கொள்கின்றோம்.

மக்கள் ஆத­ர­வுடன் அதனை செய்­கின்றோம். யார் விரும்­பியோ விரும்­பா­மலோ எனக்­கு­ரிய காலப்­ப­கு­தியில் மக்­களால் பேசப்­ப­டு­கின்ற மாந­கர சபை­யாக கல்­முனை மாந­க­ச­பையை மாற்­றி­ய­மைக்­க­ வேண்டும் என்­பதே எனது நோக்­க­மாகும். நிதி­வ­ளத்­திலும் ஏனைய துறை­களிலும் கல்­முனை மாந­கர சபை ஸ்திர­மான நிலை­மையில் உள்­ளமை குறித்து பெரு­மை­ய­டை­கின்றேன்.
 
கேள்வி: மேயர் பத­விக்­கா­லத்தை இரண்­டாகப் பிரித்து இருவர் அதனை பகிர்ந்­து­கொள்­ள­ வேண்டும் என்ற கோரிக்­கைகள் வந்­தன. அதன்­படி உங்கள் பத­விக்­காலம் முடி­வ­டை­யப்­போ­கின்­றதா? அந்த விவ­காரம் என்ன நிலையில் உள்­ளது?
 
பதில்: உண்­மையில் நான் பத­வி­யேற்­கின்­ற­போது சாய்ந்­த­ம­ருது மக்கள் 95 வீத­மானோர் எனக்கு வாக்­க­ளித்­தி­ருந்­தனர். ஏனைய பகுதி மக்­களும் வாக்­க­ளித்­தி­ருந்­தனர். அந்த வகையில் மக்கள் எங்கும் இரண்டு வரு­டங்­க­ளுக்கு என்று வாக்­க­ளிக்கும் சரித்­திரம் கிடை­யாது. எனினும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் என்­கின்ற அந்த இயக்­கத்­துக்கு கட்­சியின் தலை­மைத்­து­வத்­துக்கு கட்­டுப்­பட்டு நடப்பேன். என்னை முதல்வர் பத­வியில் அமரவைத்­தது இந்தக் கட்­சியும் மக்­க­ளு­மாவர்.
எனவே, தலை­மைத்­துவம் எடுக்­கின்ற முடி­வுக்கு எப்­போதும் கட்­டுப்­பட்­ட­வ­னாக இருப்பேன். மக்­களின் அபி­லா­ஷை­க­ளுக்கும் மதிப்­ப­ளிக்­க­வேண்டும். இரண்டு வரு­டங்­களா? அதற்கு மேல­தி­கமா என்­ப­தனை கட்­சியும் மக்­க­ளுமே தீர்­மா­னிக்­க­வேண்டும். ஆனால் என்னைப் பொறுத்­த­வரை நான் அவ்­வா­றான எந்­த­வொரு உடன்­ப­டி­க்­கையும் செய்­ய­வில்லை. ஆனால் நேரம் வரு­கின்­ற­போது கட்­சி எடுக்­கின்ற முடி­வுக்கு கட்­டுப்­ப­டுவேன்.
 
கேள்வி: கல்­முனை மாந­கர சபையில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் உறுப்­பினர் ஓரங்­கட்­டப்­ப­டு­வ­தாக குற்­றச்­சாட்டு உள்­ளதே?
 
பதில்: நிச்­ச­ய­மாக இல்லை என்றே அதற்கு பதில் கூறுவேன். தமிழ்க் கூட்­ட­மைப்பை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் உறுப்பினர்கள் என்­னுடன் சுமு­க­மாக செயற்­பட்­டு­வ­ரு­கின்­றனர். நான் அர­சி­ய­லுக்கு வந்­த­பின்னர் நிலை­மையை புரிந்­து­கொள்ள சற்று காலம் எடுத்­தது. எனினும் நான் நிலை­மையை விரை­வாக புரிந்­து­கொண்டு மிகவும் அந்­நி­யோன்­ய­மாக செயற்­பட்­டு
­வ­ரு­கின்றேன். அவர்­களின் தேவை­களை நிறை­வேற்­றிக்­கொ­டுக்­கின்றேன். குறிப்­பாக தமிழ் பிர­தே­சங்­க­ளுக்குத் தேவை­யான சேவை­களை இந்த உறுப்­பி­னர்கள் ஊடாக பெற்­றுக்­கொள்ளும் வாய்ப்பை ஏற்­ப­டுத்­திக் ­கொ­டுத்­துள்ளேன். 
அண்­மையில் கூட உறுப்­பி­னர்­க­ளுடன் தமிழ்க் கிராமம் ஒன்­றுக்குச் சென்று மல­சலகூடத் தொகுதி கழி­வு­களின் நிலை­மையை கண்டு அதிர்ந்­து­விட்டேன். உட­ன­டி­யாக நான் அதி­ரடி நட­வ­டிக்கை எடுத்து பிரச்­சி­னையை நிவர்த்தி செய்­து­கொ­டுத்தேன். நீர்வசதி இல்­லாத பகு­தி­ க­ளுக்கு அவற்றை செய்­து­ கொ­டுத்­துள்ளேன். அந்தவகையில், கூட்­ட­மைப்பின் உறுப்­பி­னர்­களும் நானும் சுமு­க­மாக செயற்­பட்­டு­ வ­ரு­கின்றோம். ஆனால், எனக்கும் கூட்­ட­மைப்பு உறுப்­பி­னர்­க­ளுக்கும் இடையில் காணப்­ப­டு­கின்ற உறவை கெடுத்­து­வி­ட­வேண்டும் என்று சில உள்ளூர் அர­சி­யல்­வா­திகள் முயற்­சிக்­கின்­றனர். அதற்கு நான் இட­ம­ளிக்­க­மாட்டேன். என்­னுடை பத­விக்­கா­லத்­துக்குள் தமிழ் பகு­தி­க­ளுக்கு கிடைக்­க­வேண்­டிய உரி­மை­க­ளையும் சேவை­க­ளையும் நான் பெற்­றுக்­கொ­டுப்பேன். இதனை மாதாந்தக் கூட்­டத்­திலும் கூறி­யுள்ளேன். தமிழ் மக்­க­ளுக்கு அநி­யாயம் நடப்­ப­தற்கு நான் ஒரு­போதும் இட­ம­ளிக்­க­ மாட்டேன்.
 
கேள்வி: கல்­முனை மாந­கர சபைக்­குட்­பட்ட பிர­தே­சங்­களை அபி­வி­ருத்தி செய்­யும்­போது பிர­தேச ரீதியில் பார­பட்­சங்கள் உள்­ள­தாக குற்­றச்­சாட்­டுக்கள் ஏதும் ...?
 
பதில்: என்னைப் பொறுத்­த­வரை நான் சாய்ந்­த­ம­ருதில் பிறந்­தாலும் கொழும்பில் கல்வி கற்று வெளி­நாட்டில் வாழ்ந்­தவன். எனக்கு இந்த பிர­தே­சவாதம் என்­றாலே என்­ன­வென்று தெரி­யாது. ஒரு­சிலர் இந்த விட­யத்தில் குளிர்­காய நினைக்­கின்­றனர். நான் சாய்ந்­த­ம­ருதில் பிறந்­ததன் கார­ண­மாக நான் சாய்ந்­த­ம­ரு­துக்கு அதி­க­மாக செய்­கின்றேன் என உள்ளூர் அர­சி­யல்­வா­திகள் கதை­களை பரப்­பி­விட்டு அதில் குளிர்­காயப் பார்க்­கின்­றனர். ஆனால், நான் அவ்­வாறு இல்லை. எல்­லோ­ருக்கும் சமபங்­கீடு என்ற வகை­யி­லேயே எனது செயற்­பா­டுகள் அமைந்­துள்­ளன.
அது­மட்­டு­மன்றி, ஆளும் கட்சி – எதிர்க்­கட்சி என்ற வித்­தி­யா­ச­மின்றி அனை­வ­ரையும் அர­வ­ணைத்துச்செல்லும் போக்கை கொண்­டுள்ளேன். ஆனால், கடந்த சில மாதங்­க­ளாக எமது ஆளும் கட்சி உறுப்­பி­னர்கள் என்­மீது குற்­றச்­சாட்­டுக்­களை சுமத்தி தலை­வ­ரிடம் முறை­யிட்­டி­ருந்­தனர். இரண்டு வரு­டங்­களில் பத­வியில் இருந்து அகற்­ற­வேண்டும் என்று பகல் கன­வு கூட காண்­கின்­றனர். ஆனால் நான் என்­னு­டைய அபி­வி­ருத்திப் பணி­களை சம அள­வி­லேயே முன்­னெ­டுத்­து­ வ­ரு­கின்றேன்.
 
கேள்வி: அர­சி­ய­லுக்கு புதி­தாக வந்து மிக விரை­வாக மேயர் பத­விக்கு வந்­து­விட்­டீர்கள். எவ்­வாறு உணர்­கின்­றீர்கள்?
 
பதில்: இது பல சவால்­க­ளுக்கு உட்­பட்ட விட­ய­மாகும். 30 வரு­டங்­க­ளாக கட்­சிக்குள் இருப்­ப­வர்­களும் தேர்­தலில் போட்­டி­யிட்­டனர். எனினும் மக்கள் என்னை தெரிவு செய்­தனர். மக்­க­ளிடம் வித்­தி­யா­ச­மான ஒரு எதிர்­பார்ப்பு இருந்­தது. ஒரு இளை­ஞனை தெரிவு செய்­ய­வேண்டும் என்ற ஆக்­ரோஷம் மக்கள் மத்­தியில் காணப்­பட்­டது. மக்கள் என்னில் பாரிய எதிர்­பார்ப்பை வைத்­துள்­ளனர். 45 நாட்­களில் அர­சி­ய­லுக்கு வந்து முதல்வர் ஆகி­யதில் சரித்­திர நாய­க­னாக நான் இன்று முஸ்லிம் காங்­கி­ரஸில் இடம்­பி­டித்­துள்ளேன். அதற்­காக தலை­மைத்­து­வத்­துக்கும் நான் என்றும் நன்­றி­யு­டை­ய­வ­னா­கவும் விசு­வாசம் உடை­ய­வ­னா­கவும் இருப்பேன்.
 
என்னை இனம்­கண்டு தேர்­தலில் கட்சி கள­மி­றக்­கி­யது. முஸ்லிம் காங்­கிரஸ் என்ற இந்­தக்­கட்­சிக்­காக நான் மிகவும் பாடு­ப­டு­கின்றேன். இந்தக் கட்­சியை வளர்த்­தெ­டுக்­க­வேண்டும் என்­பதில் அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­பட்­டு­வ­ரு­கின்றேன். முஸ்லிம் காங்­கி­ரஸை அழிக்­க­வேண்டும் என பேரி­ன­வாத சக்­திகளும் வெளி­நாட்டு சக்­தி­களும் செயற்­பட்­டு­வ­ரு­கின்­றன. மக்கள் மத்­தியில் நான் முதல்­வ­ராக வந்­தாலும் சிராஸ் என்­பவர் முஸ்லிம் காங்­கி­ரஸின் பிர­தி­நி­தி­யா­கவே உள்ளார். என்னை பொறுத்­த­மட்டில் கட்­சியை வளர்க்­க­வேண்டும் அதற்கு அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­ப­ட­வேண்டும் என்­பதே பிர­தான குறிக்­கோ­ளாகும். இது ஒரு சவா­லான விட­ய­மாகும். பல சவால்­க­ளுக்கு மத்­தி­யி­லேயே அந்த ஆச­னத்தில் நான் அமர்ந்­துள்ளேன். இன்றும் கூட பல பிரச்­சி­னைகள் உள்­ளன. என்­னு­டைய உயி­ருக்கே ஆபத்து ஏற்­படும் வகையில் சதித்­திட்­டங்கள் உள்­ளன. எனினும் இறை­வனின் நாட்­டப்­படி என்­னு­டைய கட­மை­களை செய்­து­வ­ரு­கின்றேன்.
 
கேள்வி: அர­சி­ய­லுக்கு வந்து 45 நாட்­களில் மாந­க­ர­சபை முதல்­வ­ரா­கி­யுள்­ளீர்கள். அடுத்த இலக்கு என்ன?
 
பதில்: நான் இறைவன் மீது விசு­வாசம் கொண்­டவன். நான் மாந­கர சபை முதல்­வ­ராக வருவேன் என்று எதிர்­பார்க்­க­வில்லை. தேர்­தலில் போட்­டி­யிட்டு மக்­களின் ஆணையை பார்ப்போம் என்­றுதான் போட்­டி­யிட்டேன். ஆனால் மக்­களின் தேவையை அறிந்­தி­ருந்தேன். மக்கள் வெள்­ளம் ­போன்று எனக்கு வாக்­க­ளித்­தனர். நான் பணத்தை வாரி வீசி­ய­தாக சிலர் கூறினர். அப்­படி ஒன்றும் நடக்­க­வில்லை. ஆனால் அனை­வ­ருக்கும் நன்­றாக உணவு வழங்­கினேன். அந்த வகையில் மக்கள் எனக்கு ஒரு ஆணையை வழங்­கினர். எதிர்­கா­லத்தில் மக்கள் எவ்­வா­றான தீர்­மா­னங்­களை எடுக்­கின்­ற­னரோ அதற்கு நான் தலை வணங்­குவேன். என்னை பாரா­ளு­மன்­றத்­துக்கு அனுப்ப மக்கள் தீர்­மா­னித்தால் அத­னையும் ஏற்க நான் தயா­ராக இருக்­கின்றேன். இறை­வனும் அதற்­கான சந்­தர்ப்­பத்தை வழங்கி கட்­சியும் அனு­ம­தித்தால் அதனை பரி­சீ­லிக்க தயா­ராக இருக்­கின்றேன்.
 
கேள்வி: 13ஆவது திருத்தச் சட்டம் குறித்த உங்கள் நிலைப்­பாடு ?
 
பதில்: 13 ஆம் திருத்­தத்தில் கைவைப்­ப­தா­னது சிறு­பான்மை மக்­களின் உரி­மை­களில் கை வைப்­ப­தற்கு சம­மாகும். இது எனது தனிப்­பட்ட கருத்­தாகும். இந்த இடத்தில் முஸ்லிம் காங்­கி­ரஸின் தீர்­மானம் குறித்து மக்கள் ஆவ­லுடன் உள்­ளனர். கிழக்கு மாகாண சபையில் காங்­கிரஸ் என்ன செய்­யப்­போ­கின்­றது என்று பார்த்­துக்­கொண்­டி­ருக்­கின்­றனர். 13 ஆம் திருத்தச் சட்­டத்தில் உள்ள காணி மற்றும் பொலிஸ் அதி­கா­ரங்கள் நீக்­கப்­பட்­டு­வி­டுமா என மக்கள் சிந்­திக்­கின்­றனர். எனவே அர­சாங்கம் இந்த விட­யத்தை மறு­ப­ரி­சீ­லனை செய்­ய­வேண்டும். மக்­க­ளோடு நாங்கள் நேர­டி­யாக தொடர்­பு­கொள்­கின்றோம். 13 இல் கைவைப்­ப­தா­னது பார­தூ­ர­மான விட­ய­மாக உள்­ளது. இந்த விட­யத்தில் தலை­வரும் உறு­தி­யாக உள்­ளார்.
 
கேள்வி: இது தொடர்பில் உங்கள் கட்­சியின் தலை­மைத்­து­வத்­துடன் பேசி­னீர்­களா?
 
பதில்: தலை­வ­ருடன் இது தொடர்பில் பேச்சு நடத்­தினேன். அத்­துடன் அடுத்த மாதாந்த கூட்டத் தொடரில் 13 இல் கை வைக்­க­க்­கூ­டாது என பிரே­ரணை ஒன்றை நிறை­வேற்­ற­வுள்ளோம். இது மிகவும் முக்­கி­ய­மான விட­ய­மாகும். 13 இல் கைவைப்­பது என்­பது சிறு­பான்மை மக்­க­ளுக்கு மட்­டு­மல்ல பெரும்­பான்மை மக்­க­ளுக்கும் பாதிப்­பா­கவே அமையும். இந்த விட­யத்தில் முஸ்லிம் காங்­கிரஸ் கட்­சியும் அதன் தலை­மையும் மிகவும் தெளி­வாக இருக்­கின்­றது.
இதே­வேளை கல்­முனை மாந­கர மக்­க­ளுக்கு ஒரு விட­யத்தை தெளி­வு­ப­டுத்­த­ வி­ரும்­பு­கின்றேன். அதா­வது நான் எந்த நோக்­கத்­துக்­காக அர­சி­ய­லுக்கு வந்­தேனோ பல சவால்­க­ளையும் தாண்டி அந்த நோக்­கத்தை அடைய மக்­க­ளு­கக்கு சேவை­யாற்­றி­வ­ரு­கின்றேன். மக்கள் தற்­போது விழிப்­பாக உள்­ளனர். மக்கள் மாந­கர சபையை தராசில் வைத்து நிறுக்­கின்­றனர். ஒரு­வ­ருக்கு வழங்­கப்­பட்ட காலப்­ப­கு­தியில் அவர் என்ன செய்­துள்ளார் என்று அளவிடுகின்றனர். கிழக்கு மாகாணத்தில் உள்ள அரசியல்வாதிகளை மக்கள் அளவிடுகின்றனர்.
 
மக்களை அரசியல் ஊடாக ஏமாற்ற முடியாது. அரசியல் இன்று மக்கள் மயப்படுத்தப்பட்டுவிட்டது. மக்கள் தெளிவாக உள்ளனர். மக்களின் தேவைகளை நிறைவேற்றவே அரசியலுக்கு வந்துள்ளோம். நான் மாநகர சபைக்கு மட்டுமே முதல்வராக இருக்கின்றேன். இதனை தாண்டி தேசிய அரசாங்கத்திலோ அல்லது மாகாண அரசாங்கத்திலோ நான் இடம்பெறவேண்டுமானால் அதனை மக்கள் தீர்மானிக்கலாம். முதல்வர் என்ற வகையில் என்னால் முடிந்தளவு எனது அதிகாரங்களுக்கு உட்பட்டு சேவையாற்றுவேன். 
 
எனவே எனது காலப்பகுதியில் மக்கள் எனக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று கோருகின்றேன்.

Share this article :

Post a Comment

 
Support : www.aasathmirror.com | Pusat Promosi
Copyright ©www.aasathmirror.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Modify by