நடந்து முடிந்த மாகாண சபைகளுக்கான தேர்தலில் வடக்கில் தமிழ்த்தேசியக்
கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்றதையிட்டு பாராட்டு தெரிவிப்பதோடு மூன்று
சபைகளிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி நிதித்துவத்தை
நிலைநாட்டுவதற்கு வாக்களித்தவர்களுக்கு அக்கட்சியின் தலைவரும்
நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் மனப்பூர்வமான நன்றி தெரிவித்துள்ளார்.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வட மாகாண சபையில் சபையில் தமது கட்சி தனித்துவக்குரலாக ஒலிக்கும் என உறுதியாகக் கூறியது உண்மையாகிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் முடிவுகள் உத்தியோக பூர்வமாக வெளிவந்த பின்னர் அமைச்சர் ஹக்கீம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது.
அரசாங்கத்தில் பொறுப்பு வாய்ந்த நீதியமைச்சர் பதவியை வகித்து வரும் எனது தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது மரச்சின்னத்தில் தேர்தலில் தனித்து போட்டியிடுவதற்கு வாய்ப்பளித்தன் ஊடாக, நாம் மூன்று மாகாண சபைகளிலும் வெற்றி பெற்று நாட்டில் ஜனநாயகம் நிலவுகின்றது என்பதை நிரூபித்ததற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மகிழ்ச்சியடைவார் என நம்புகின்றேன்.
முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காகக் கூறிக்கொள்ளும் ஏனைய கட்சிகள் வேறு பிரதான கட்சியின் முதுகில் ஏறி சவாரி செய்யும் போது துணிச்சலுடனும், முதுகெலும்புடனும் தேர்தல்களில் எமது மரச்சின்னத்தில் தனித்துப் போட்டியிட்டு வெற்றிபெறுவதையிட்டு கட்சியின் தொண்டர்களும், ஆதரவாளர்களும் பேருவகையும், பெருமிதமும் அடைகின்றனர்.
இந்நாட்டு முஸ்லிம்களுக்குரிய அரசியல் சக்தி முஸ்லிம் காங்கிரஸ் தான் என்பதை மீண்டுமொருமுறை எமது வாக்களப் பெருமக்கள் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
வட மாகாண சபை தேர்தலில் வன்னி அரசியல் வாதியொருவரினாலும், அவரது அடிவருடிகளிகளினாலும் மேற்கொள்ளப்பட்ட அச்சுறுத்தல்களுக்கும், அடாவடித்தனங்களுக்கும் மத்தியில் எமது வாக்காளர்கள் தங்களது பெறுமதியான வாக்குகளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு வழங்கியிருக்கின்றனர்.
அத்துடன் ஜனாதிபதி, தமிழ் மக்களின் சுயநிர்ணயத்திற்கும் உரிமைகளுக்கும் மதிப்பளித்து வடமாகாண சபை தேர்தலை நடாத்த நடவடிக்கை மேற்கொண்டதற்காக அவருக்கு நன்றி தெரிவிப்பதோடு, மூன்று மாகாணங்களிலும் இயன்றவரை தேர்தலை சுமூகமாக நடாத்துவதற்கு உதவிய தேர்தல்கள் ஆணையாளர், பிரதி ஆணையாளர், தெரிவட்தாட்சி அதிகாரிகள், அரச ஊழியர்கள், பொலிசார் ஆகியோருக்கும் நன்றிகளைத் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் பிரசாரப்பணிகளுக்காக மூன்று மாகாணங்களிலும் இரவு, பகல் பாராது அயராது பணியற்றிய எமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகணசபை அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள், பிரதேச சபை தலைவர்கள், உறுப்பினர்கள், கட்சித் தொண்டாகள் அனைவருக்கும்; ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சாhபில் விசேடமாக நன்றி தெரிவிக்கின்றேன்.
இவ்வாறு முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வட மாகாண சபையில் சபையில் தமது கட்சி தனித்துவக்குரலாக ஒலிக்கும் என உறுதியாகக் கூறியது உண்மையாகிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் முடிவுகள் உத்தியோக பூர்வமாக வெளிவந்த பின்னர் அமைச்சர் ஹக்கீம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது.
அரசாங்கத்தில் பொறுப்பு வாய்ந்த நீதியமைச்சர் பதவியை வகித்து வரும் எனது தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது மரச்சின்னத்தில் தேர்தலில் தனித்து போட்டியிடுவதற்கு வாய்ப்பளித்தன் ஊடாக, நாம் மூன்று மாகாண சபைகளிலும் வெற்றி பெற்று நாட்டில் ஜனநாயகம் நிலவுகின்றது என்பதை நிரூபித்ததற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மகிழ்ச்சியடைவார் என நம்புகின்றேன்.
முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காகக் கூறிக்கொள்ளும் ஏனைய கட்சிகள் வேறு பிரதான கட்சியின் முதுகில் ஏறி சவாரி செய்யும் போது துணிச்சலுடனும், முதுகெலும்புடனும் தேர்தல்களில் எமது மரச்சின்னத்தில் தனித்துப் போட்டியிட்டு வெற்றிபெறுவதையிட்டு கட்சியின் தொண்டர்களும், ஆதரவாளர்களும் பேருவகையும், பெருமிதமும் அடைகின்றனர்.
இந்நாட்டு முஸ்லிம்களுக்குரிய அரசியல் சக்தி முஸ்லிம் காங்கிரஸ் தான் என்பதை மீண்டுமொருமுறை எமது வாக்களப் பெருமக்கள் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
வட மாகாண சபை தேர்தலில் வன்னி அரசியல் வாதியொருவரினாலும், அவரது அடிவருடிகளிகளினாலும் மேற்கொள்ளப்பட்ட அச்சுறுத்தல்களுக்கும், அடாவடித்தனங்களுக்கும் மத்தியில் எமது வாக்காளர்கள் தங்களது பெறுமதியான வாக்குகளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு வழங்கியிருக்கின்றனர்.
அத்துடன் ஜனாதிபதி, தமிழ் மக்களின் சுயநிர்ணயத்திற்கும் உரிமைகளுக்கும் மதிப்பளித்து வடமாகாண சபை தேர்தலை நடாத்த நடவடிக்கை மேற்கொண்டதற்காக அவருக்கு நன்றி தெரிவிப்பதோடு, மூன்று மாகாணங்களிலும் இயன்றவரை தேர்தலை சுமூகமாக நடாத்துவதற்கு உதவிய தேர்தல்கள் ஆணையாளர், பிரதி ஆணையாளர், தெரிவட்தாட்சி அதிகாரிகள், அரச ஊழியர்கள், பொலிசார் ஆகியோருக்கும் நன்றிகளைத் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் பிரசாரப்பணிகளுக்காக மூன்று மாகாணங்களிலும் இரவு, பகல் பாராது அயராது பணியற்றிய எமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகணசபை அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள், பிரதேச சபை தலைவர்கள், உறுப்பினர்கள், கட்சித் தொண்டாகள் அனைவருக்கும்; ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சாhபில் விசேடமாக நன்றி தெரிவிக்கின்றேன்.
இவ்வாறு முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Post a Comment