
ஷவ்வால் மாதத்துக்கான தலைபிறை நாட்டின் எந்த ஒரு பிரதேசத்திலும் தென்படாத நிலையில் ரமாழான் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்து வெள்ளியன்று புனித நோன்புப் பெருநாளை கொண்டாடுவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்ற ஜம்இய்யதுல் உலமா சபையின் பிறைக் குழு கூட்டத்திலேயே இந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
நாட்டில் எந்த ஒரு பகுதியிலும் பிறையை காணாத நிலையில் ரமாழான் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்வது என தீர்மானித்த பிறைக்குழு, நாளை நோன்பு அனுஷ்டிப்பது எனவும் நாளை மறுதினத்தை ஷவ்வால் தலைபிறையாகக் கொண்டு பெருநாள் கொண்டாடுவது எனவும் தீர்மானித்தது.
கிண்ணியா, காலி போன்ற பகுதிகளில் பிறை தென்பட்டதாக அறிவிக்கப்பட்ட போதிலும் சாட்சியங்களில் முரண்பாடு காணப்பட்டதால் அவற்றை நிராகரித்து விட்டதாக உலமா சபையின் பத்வாக் குழு செயலாளர் தெரிவித்தார்.
Post a Comment