Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
  • உங்கள் பிரதேசத்தில் இடம்பெரும் செய்திகளையும் எங்களுக்கு அனுப்பலாம் e-mail : aasathsmart@yahoo.com phone:+94779028439

மேயர் பதவியில் சிராஸ் தொடர வேண்டும் பொது மக்கள் மத்தியில் தீர்மானம்!

Thursday, October 310 comments

கல்முனை மாநகர சபையின் மேயராக தொடர்ந்து நான்கு வருடங்களுக்கும் சிராஸ் மீராசாஹிவுதான் இருக்க வேண்டுமென்று சற்று முன் நடைபெற்று முடிவடைந்துள்ள கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேயர் சிராஸ் மீராசாஹிவுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கூட்டத்தில் கல்முனை மாநகர சபையின் உறுப்பினர்களான அமீர், பிர்தௌஸ், நபார், முபீத், நிஸார்தீன் சாய்ந்தமருது பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையினர், கல்முனை விகாராதிபதி சங்கரத்ன தேரா் ,வர்த்தக சங்கத்தினர், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொது மக்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டார்கள்.

இங்கு தீர்மானங்கள் வாசிக்கப்பட்டதும் நாரே தக்பிர் சொல்லி தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.கூட்டத்தில் மாநகர சபை உறுப்பினர்களான அமீர், பிர்தௌஸ் மற்றும் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் ஹனீபா, விகாராதிபதி சங்கரத்ன தேரா் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.

பிரதான உரையை மேயர் சிராஸ் மீராசாஹிப் நிகழ்த்தினார். தனது அரசியல் ஆரம்பம் மற்றும் தனது வேலைத்திட்டங்களின் முன்னடுப்பு, கட்சியின் மீதான பற்று, மேயர் பதவிக்கால ஓப்பந்த விடயம் தொடர்பில் விரிவான உரையை சிராஸ் நிகழ்த்தினர். இவரது உரைக்கு பலத்த கரகோசம் கூட்ட மண்டபத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

மேயர் சிராஸை சாய்ந்தமருது மக்கள் தமது தலைவனாக ஏற்றுக்கொண்டிருப்பதை இக்கூட்டம் பறைசாற்றியது.

 முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் இதயமான சாய்ந்தமருதை கட்சி புறக்கணிக்குமாயின் முஸ்லிம் காங்கிரஸ் வரலாற்று ரீதியான தோல்விக்கு முகம் கொடுக்கக் கூடிய நிலைக்குத் தள்ளப்படும் என அரசியல் ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்



தீர்மானம்  - 01 :
கல்முனை மாநகர சபையின் கௌரவ முதல்வராக கலாநிதி சிராஸ் மீராசாகிப்  அவர்கள் தற்போது வகித்துவரும் பதவியில் குறித்த சபையின் இம்முறைக்கான ஆயுள் காலம் முழுவதும் தொடர்ந்தும் பதவியில் இருக்க எமது கட்சியான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதன் ஒப்புதலையும் அங்கீகாரத்தையும் வழங்க வேண்டும்.

தீர்மானம்  - 02 :
தற்போது சாய்ந்தமருதின் அரசியல் அதிகார சுமூகத்திற்கு ஏற்பட்டுள்ள விரிசலையும், சவாலையும், எதிர்காலத்தில் பூரணமாக தவிர்த்துக் கொள்ளும் நல்லெண்ணத்தில், அடுத்து வருகின்ற ஊள்ளூராட்சிக்கான தேர்தலை சாய்ந்தமருது தனியான ஓர் உள்ளூராட்சி மன்றமாக நின்று சந்திக்க எமது கட்சியான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தீர்மானம்  - 03 :
35 ஆண்டுகளுக்கு பிறகு எமது ஊருக்கு  கிடைத்த மாநகர முதல்வர் எனும் இம்மாநகர சபையின்   முதல்வர் பதவியை, அரசியல் அந்தஸ்தை நாம் நிரப்பமாக அனுபவித்துகொள்ள, எமது கட்சியின்  சம்பந்தப்பட்ட தலைமை பீடத்துடன் சாய்ந்தமருது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின்  மத்திய குழு  சுமூகமாக பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும்.



தீர்மானம்  - 04 :
சாய்ந்தமருது மக்களின் சமூக வாழ்வியலை நெறிப்படுத்துவதில் சாய்ந்தமருது ஜூம்ஆ பள்ளிவாயலின் நம்பிக்கையாளர் சபை என்றும் தனது கடமையில் இருந்து விலகிப்போன சந்தர்ப்பங்கள் கிடையாது. தற்போது எமது ஊரின் அரசியல் அந்தஸ்து சந்தித்துள்ள மேலே விபரிக்கப்பட்ட இச்சூழலை நெருக்கடியிலிருந்து ஐதாக்கி இது குறித்த தீர்மானங்களை சம்பந்தப்பட்டவர்களுக்கு எடுத்துரைத்து ஒரு சாதகமான தீர்வை எமது மக்களுக்கு பெற்றுத்தருமாறு நம்பிக்கையாளர் சபையினை மிகப்பணிவுடன் கேட்டுக் கொள்கின்றோம்.
Share this article :

Post a Comment

 
Support : www.aasathmirror.com | Pusat Promosi
Copyright ©www.aasathmirror.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Modify by