வட மாகாணத்தில் ஒன்றுக்கு மேல் ஆனசங்களை எதிர்பார்த்திருக்கவில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
வடக்கில் அதிக முஸ்லிம்கள் உள்ள போதும் அனேகமானவர்கள் இடம்பெயர்ந்துள்ளதால் வாக்களிப்பில் அவர்கள் சிரமங்களை எதிர்கொண்டதால் கனிசமான வாக்குகளைப் பெற முடியாது போனதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் வடக்கில் முஸ்லிம்களின் தனித்துவக் குரலாக செயற்பட முஸ்லிம் காங்கிரஸுக்கு ஒரு ஆசனம் கிடைத்தமை ஆருதல் தருவதாக ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் முஸ்லிம்கள் அளித்த வாக்குகள் இரண்டு பெரும்பான்மை பிரதிநிதித்துவம் வருவதற்கே இடமளித்துள்ளதால் ஹக்கீம் குறிப்பிட்டார்.
இதற்கு முஸ்லிம் கட்சிகள் இடையே ஒற்றுமையின்மையே காரணம் என அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்று தனிச் சின்னத்தில் போட்டியிட அனைத்து முஸ்லிம் கட்சிகளும் தாம் அழைப்பு விடுத்ததாகவும் ஆனால் அரசாங்கத்தை விட்டு வெளியேற அவர்கள் தயாராக இருக்கவில்லை எனவும் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிகூடிய பெரும்பான்மையை பெற்றுள்ளதால் சிறு கட்சிகளின் ஆதரவு அவர்களுக்கு தேவையில்லை. ஆகையால் கூட்டமைப்பின் நல்ல முயற்சிகளுக்கு ஆதரவளித்தும் விபரீத முயற்சிகளை விமர்சித்தும் சுமுகமான உறவைப் பேணிச் செல்ல எண்ணியுள்ளதாக ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
பிபிசி தமிழோசைக்கு வழங்கிய செவ்வியில் ஹக்கீம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Post a Comment