Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
  • உங்கள் பிரதேசத்தில் இடம்பெரும் செய்திகளையும் எங்களுக்கு அனுப்பலாம் e-mail : aasathsmart@yahoo.com phone:+94779028439

SLMC யை வெளியேற்றினால் அரசாங்கம் அதன் விளைவுகளை அனுபவிக்க நேரும்!

Friday, August 300 comments

முஸ்லிம் காங்கிரஸை வெளியேற்றினால் அரசாங்கம் விளைவுகளை அனுபவிக்க நேரும்!
முஸ்லிம் காங்கிரஸை வெளியேற்றினால் அரசாங்கம் விளைவுகளை அனுபவிக்க நேரும்!
வட மாகா­ண­சபை தேர்­த­லுடன் அர­சாங்கம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸை வெளி­யேற்றி விடும் என்று கூறப்­ப­டு­கின்­றது.

அவ்­வாறு வெளி­யேற்­றினால் அதன் விளை­வு­களை அர­சாங்கம் எதிர்­கொள்ள வேண்டி ஏற்­படும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும் நீதி­ய­மைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் எச்­ச­ரிக்கை விடுத்தார்.

புதன்­கி­ழமை வட­மா­கா­ணத்தில் பல தேர்தல் பிர­சாரக் கூட்­டங்­களில் கலந்­து­கொண்ட அமைச்சர் ஹக்கீம் புளிச்­சாக்­கு­ளத்தில் மீள்­கு­டி­யே­றி­யுள்ள மக்கள் மத்­தியில் பேசு­கை­யிலேயே மேற்­கண்­ட­வாறு கூறினார்.

அவர் தொடர்ந்து பேசு­கையில்;

வட­மா­காண சபை தேர்­தலில் அரசை பல­வீ­னப்­ப­டுத்­து­வ­தற்கோ அல்­லது தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை பலப்­ப­டுத்தும் நோக்­கிலோ ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தனித்துப் போட்­டி­யி­ட­வில்லை. நடுநிலைமை­யி­லி­ருந்தே போட்­டி­யி­டு­கின்­றது.

இந்­நி­லையில் அரசு எம்மை விமர்­சிக்கும் நோக்­கோடு பார்க்­கி­றது. நாம் அர­சாங்­கத்­தோடு இணைந்து போட்­டி­யி­டாமை குறித்து தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு ஆறு­த­ல­டை­வ­தாகத் தெரி­கி­றது.

வட மாகாண சபை தேர்­தலில் அர­சாங்­கத்­துக்கும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கும் இடையில் கயிறு இழுத்தல் போட்­டி­யொன்று நடை­பெ­று­கி­றது.

இந்தப் போட்­டியில் முஸ்லிம் காங்­கிரஸ் நடு­நிலை பார்­வை­யா­ள­ராக இருப்­ப­தோடு தனது அடிப்­படைக் கொள்­கை­க­ளி­லி­ருந்து விலகிச் செல்­லாது தனித்­துவ அர­சி­யலை முன்­னெ­டுத்து வரு­கின்­றது.

அரசாங்கம் அபி­வி­ருத்தி என்ற மாயையைக் காட்டி எல்லா விட­யங்­க­ளிலும் எம்மை அடி­ப­ணி­ய ­வைக்க நாம் ஒரு போதும் அனு­ம­திக்­க­மாட்டோம்.

வட மாகா­ண­சபை தேர்­தலில் எங்­களை அர­சுடன் சேர்ந்து போட்­டி­யிடச் செய்து எமது முதுகில் ஏறி சவாரி செய்­வ­தற்­கான முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்­டன. எமது கட்­சியில் உள்­ள­வர்­களும் இதற்­கான சூழ்ச்­சி­களை மேற்­கொண்­டார்கள்.எம்மை பக­டைக்­கா­யாகக் கரு­தி­னார்கள். இதற்கு கட்­சியின் அபி­மா­னிகள், விசு­வா­ச­முள்­ள­வர்கள் இட­ம­ளிக்­க­வில்லை.

எமது கட்­சியை உள்ளே வைத்துக் கொண்டே பல­வீ­னப்­ப­டுத்­து­வ­தற்கு அரசு முயற்சி செய்து வரு­கி­றது. நாம் சர­ணா­கதி அர­சியல் செய்ய வேண்­டிய அவ­சி­ய­மில்லை. முஸ்லிம் காங்­கிரஸ் ஏமாந்த சோனகிரிக­ளு­மல்ல.

வட பகு­தியில் இன்று இரா­ணுவ கெடு­பி­டிகள் அதி­க­ரித்துக் காணப்­ப­டு­கின்­றன. மன்னார் முசலிப் பிர­தே­சத்தில் சிலா­வத்­து­றையில் உள்ள கடற்­படை முகாம் அந்தக் கிரா­மத்­தையே உள்­வாங்கிக் கொள்­வ­தற்­கான ஏற்­பா­டுகள் நடை­பெ­று­கின்­றன. இவ்­வா­றான சிறுபான்­மை­யி­ன­ருக்கு எதி­ரான செயற்­பா­டு­க­ளுக்கு எதி­ராக உரிமைப் போராட்­டங்­களை நடத்த வேண்டும்.

இவ்­வா­றான கெடு­பி­டி­களை தவிர்ப்­ப­தற்கு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு மற்றும் ஒத்த கருத்­து­டைய அர­சியல் கட்­சி­க­ளுடன் இணைந்து அர­சியல் வேறு­பா­டு­களை மறந்து உரிமைப் போராட்­டங்­களை முன்­னெ­டுப்­பதில் தவ­றில்லை என்றே கரு­து­கின்றேன்.

எமது அர­சியல் கொள்­கை­களை விட்டுக் கொடுக்­காது உரி­மை­க­ளுக்கு இணைந்து குரல் கொடுப்­பதில் தவ­றில்லை என்றே கரு­து­கிறேன்.


இன்று உரி­மை­க­ளுக்­காக சாத்­வீகப் போராட்­டங்­களை முன்­னெ­டுக்க வேண்­டிய தேவை ஏற்­பட்­டுள்­ளது. ஆயுதப் போராட்டம் முடி­வுக்கு கொண்டு வரப்­பட்­டுள்ள நிலையில் சமூ­கங்­க­ளுக்­கி­டையில் ஒற்றுமையும் சம உரிமைகளும் உறுதிப்படுத்தப்பட வேண்டியது அவசியமாகும் என்றார்.
Share this article :

Post a Comment

 
Support : www.aasathmirror.com | Pusat Promosi
Copyright ©www.aasathmirror.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Modify by