சஹிரியன் நண்பர்கள் அமைப்பின் அங்குராப்பணமும்
இப்தார் நிகழ்வும் (30.07.2013) பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது.
கல்முனை சாஹிரா பழைய மாணவ நண்பர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி. சிராஸ் மீராசாகிப் கலந்து சிறப்பித்து சஹிரியன் நண்பர்கள் அமைப்பின் சின்னத்தை அங்குரார்பணம் செய்துவைத்தார்.
இந்நிகழ்வில் கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் அதிபர் எம்.எச்.எம்.ஆதம்பாவா,பாடசாலை ஆசிரியர்கள், சாய்ந்தமருது ஜூம் ஆ பெரிய பள்ளிவாசலின் பேஸ் இமாம் எம்.ஆதம்பாவா மற்றும் பாடசாலையின் பழைய மாணவர்கள் கலந்துகொண்டனர்.





Post a Comment