Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
  • உங்கள் பிரதேசத்தில் இடம்பெரும் செய்திகளையும் எங்களுக்கு அனுப்பலாம் e-mail : aasathsmart@yahoo.com phone:+94779028439

மாணவர்கள் கொலையுடன் தொடர்புடைய 12 விசேட அதிரடிப் படையினருக்கு விளக்கமறியல்

Friday, July 50 comments

மாணவர்கள் கொலையுடன் தொடர்புடைய 12 விசேட அதிரடிப் படையினருக்கு விளக்கமறியல் 
2006ம் ஆண்டு திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் 12 பொலிஸ் விசேட அதிரடிப்படை உறுப்பினர்களை எதிர்வரும் 18ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நேற்று (04) திருகோணமலை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

உதவி பொலிஸ் அதிகாரி ஒருவரும் 11 பொலிஸ் விசேட அதிரடிப்படையினருமே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட உதவி பொலிஸ் அதிகாரி கொலை இடம்பெற்ற காலத்தில் திருகோணமலை பொலிஸ் பரிசோதகராக செயற்பட்டுள்ளார்.

பல்கலைக்கழக அனுமதியை எதிர்பார்த்து காத்திருந்த 4 மாணவர்களும் மொரட்டுவ பல்கலைக்கழகத்திற்கு அனுமதி பெற்றிருந்த ஒரு மாணவரும் 2006ம் ஆண்டு மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

(அத தெரண - தமிழ்) 

Share this article :

Post a Comment

 
Support : www.aasathmirror.com | Pusat Promosi
Copyright ©www.aasathmirror.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Modify by