Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
  • உங்கள் பிரதேசத்தில் இடம்பெரும் செய்திகளையும் எங்களுக்கு அனுப்பலாம் e-mail : aasathsmart@yahoo.com phone:+94779028439

இடமாற்றம் செய்யப்பட்ட டி.ஐ.ஜி மீண்டும் கிழக்கில்

Saturday, October 50 comments


இடமாற்றம் வழங்கப்பட்ட கிழக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர மீண்டும் கிழக்குக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று சனிக்கிழமை காலை அவர் தனது மட்டக்களப்பிலுள்ள பழைய அலுவலகத்தில் கடமைப் பொறுப்பை ஏற்றார்.
பொலிஸாரை முழந்தாளிட வைத்த சர்ச்சையில் சிக்கியதனால் அதனை விசாரிப்பதற்கென கொழும்பிலிருந்து விஷேட அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தனர்.
 
அதன் பின்னர் கடந்த 23.09.2013 அன்று அவருக்கு கொழும்பு பொலிஸ் தலைமையகத்துக்கு தற்காலிக இடமாற்றம் வழங்கப்பட்டிருந்தது.  அவரது இடத்திற்கு ஊவா மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நியமிக்கப்பட்டிருந்தார்.
எனினும் மீண்டும் தற்போது பூஜித்த ஜயசுந்தர கிழக்கு மாகாணம் திரும்பி தனது கடமைப் பொறுப்பையேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share this article :

Post a Comment

 
Support : www.aasathmirror.com | Pusat Promosi
Copyright ©www.aasathmirror.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Modify by