Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
  • உங்கள் பிரதேசத்தில் இடம்பெரும் செய்திகளையும் எங்களுக்கு அனுப்பலாம் e-mail : aasathsmart@yahoo.com phone:+94779028439

கிழக்கில் முஸ்லிம்கள் தொடர்பில் அரசுக்கு அச்சமாம்

Wednesday, June 190 comments

வடக்கு-கிழக்கு மாகாண சபைகளை இணைப்பதற்கான சட்டமூலம் தற்போது இல்லாதொழிக்கப்பட்டுவிட்டது. எனினும் கிழக்கு மாகாண முஸ்லிம் மக்கள், வடக்கில் வாழும் தமிழ் மக்களுடன் இணைந்து வட-கிழக்கை இணைக்கும் நடவடிக்கையொன்றை மேற்கொள்ளலாம் என்ற அச்சம்  அரசாங்கத்திடம் உள்ளது. என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.





அதன் காரணமாகவே மாகாண சபைகளை இணைக்கும் தீர்மானத்தை எதிர்த்து பாராளுமன்றத்தில் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. எனினும் கிழக்கில் வாழும் முஸ்லிம்கள், தமிழ் மக்களுடன் இணைந்து போக நினைத்தாலும் அங்குள்ள சிங்கள மக்கள் அதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.



ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Share this article :

Post a Comment

 
Support : www.aasathmirror.com | Pusat Promosi
Copyright ©www.aasathmirror.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Modify by