Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
  • உங்கள் பிரதேசத்தில் இடம்பெரும் செய்திகளையும் எங்களுக்கு அனுப்பலாம் e-mail : aasathsmart@yahoo.com phone:+94779028439

மாத்தறையில் பதற்றம்: துப்பாக்கி சூடு, இருவர் காயம் மாத்தறையில் பதற்றம்: துப்பாக்கி சூடு, இருவர் காயம்

Saturday, October 50 comments


மாத்தறையில் பதற்றம்: துப்பாக்கி சூடு, இருவர் காயம்



மாத்தறை நகரப் பகுதியில் பதற்றமான சூழ்நிலை எற்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை தலைவர் பதவியிலிருந்து விலக்குமாறு கோரி இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டம் காரணமாக இப் பகுதியில் பதற்றமான நிலை காணப்படுகிறது.

இந்த பகுதியில் இரண்டு துப்பாக்கி சூட்டு சத்தங்கள் கேட்டதாகவும் இந்நிலையில் இருவர் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.

மாத்தறை, தெவிநுவர பிரதேசத்தில் ஆரம்பமான ஆர்ப்பாட்ட பேரணிக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாணசபை உறுப்பினர் மைத்திரி குணவர்தன மற்றும் ஷிரால் லக்திலக்க தலைமை தாங்கினர்.

இதேவேளை மாத்தறை, வெல்லமடின் பிரதேசத்தில் அரம்பமான ஆர்ப்பாட்ட பேரணி பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தலைமையில் இடம்பெற்றது.

மாத்தறை நகரப்பகுதியில் இரு பகுதியினரும் சந்தித்தவேளை இரு குழுக்களுக்கும் இடையில் மோதல்நிலை ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது கற்களும் வீசப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
Share this article :

Post a Comment

 
Support : www.aasathmirror.com | Pusat Promosi
Copyright ©www.aasathmirror.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Modify by