Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
  • உங்கள் பிரதேசத்தில் இடம்பெரும் செய்திகளையும் எங்களுக்கு அனுப்பலாம் e-mail : aasathsmart@yahoo.com phone:+94779028439

அதிசிறந்த கிரிக்கெட் வீரர் ஹேரத்; மக்கள் அபிமான வீரர் சங்கக்கார

Thursday, September 120 comments

டெஸ்ட் கிரிக்கெட் போட்­டி­களில் கடந்த பரு­வ­கா­லத்தில் பந்­து­வீச்சில் அதீத ஆற்­றல்­களை வெளிப்­ப­டுத்­திய ரங்­கன ஹேரத், இலங்கை கிரிக்கெட் விருது விழாவில் வரு­டத்தின் அதி சிறந்த கிரிக்கெட் வீரர் என்ற உய­ரிய விருதை வென்­றெ­டுத்தார்.

 வரு­டத்தின் அதி சிறந்த வீரர் விருதை ரங்­கன ஹேரத் முதல் தட­வை­யாக வென்­றெ­டுத்த அதே­வேளை மக்கள் அபி­மான வீரர் விருதை குமார் சங்­கக்­கார நான்­கா­வது தட­வை­யாக வென்­றெ­டுத்தார்.
டயலொக் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் விருது விழா பத்­த­ர­முல்லை வோட்டர்ஸ் எஜ்ஜில் நேற்­று­முன்­தினம் இரவு கோலா­க­ல­மாக நடத்­தப்­பட்­டது.

இவ்­வி­ழா­வின்­போது அதி சிறந்த டெஸ்ட் பந்­து­வீச்­சாளர் விருதை ரங்­கன ஹேரத்தும் அதி சிறந்த டெஸ்ட் துடுப்­பாட்ட வீரர் விருதை குமார் சங்­கக்­கா­ரவும் தம­தாக்­கிக்­கொண்­டனர்.

 விரு­துக்­கான பரு­வ­கா­லத்தில் ரங்­கன ஹேரத் 46 டெஸ்ட் விக்­கெட்­களைக் கைப்­பற்­றி­யி­ருந்தார். இவர் கடந்த வருடம் டெஸ்ட் அரங்கில் அதி­கூ­டிய விக்­கெட்­களைக் கைப்­பற்­றி­யி­ருந்­த­துடன் 200 டெஸ்ட் விக்கெட்­களைக் கைப்­பற்­றிய மூன்­றா­வது இலங்­கையர் என்ற பெரு­மைக்கும் உரி­ய­வ­ரானார்.

குமார் சங்­கக்­கார குறிப்­பிட்ட காலப்­ப­கு­தியில் இரண்டு டெஸ்ட் போட்­டி­களில் மாத்­திரம் விளை­யாடி மூன்று சதங்கள் அடங்­க­லாக 441 ஓட்­டங்­களைக் குவித்­தி­ருந்தார்.

இதே­வேளை திலக்­க­ரட்ன டில்ஷான் அதி சிறந்த சர்­வ­தேச ஒருநாள் துடுப்­பாட்ட வீரர் விரு­தையும் லசித் மாலிங்க அதி­சி­றந்த சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் பந்­து­வீச்­சாளர் விரு­தையும் வென்­றெ­டுத்­தனர்.


சர்­வ­தேச ஒருநாள் கிரிக்­கெட்டில் அதி சிறந்த சக­ல­துறை வீர­ருக்­கான விருது அணித் தலைவர் ஏஞ்­சலோ மெத்­யூ­ஸுக்கு வழங்­கப்­பட்­டது.

வளர்ந்­து­வரும் கிரிக்கெட் வீரர் விருதை தினேஷ் சந்­திமால் வென்­றெ­டுத்தார். மகளிர் பிரிவில் வரு­டத்தின் அதி சிறந்த கிரிக்கெட் வீராங்­கனை மற்றும் மகளிர் சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் போட்­டி­களில் அதி சிறந்த சக­ல­துறை வீராங்­கனை ஆகிய விரு­து­களை இலங்கை மகளிர் கிரிக்கெட் அணித் தலைவி சசிகலா சிறி­வர்­தன வென்­றெ­டுத்தார்.

இப்­பி­ரிவில் அதி­சி­றந்த துடுப்­பாட்ட வீராங்­க­னைக்­கான விருது சமனி சென­வி ­ரத்­ன­வுக்கும் அதி­சி­றந்த பந்­து­வீச்­சா­ளினி விருது தீபிகா ரசங்கிக்காவுக்கும் வழங்கப்பட்டன.

இந்த விருதுகளை விட உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் சம்பியனான அணிகளுக்கும் உப சம்பியனான அணிகளுக்கும் சிறந்த வீரர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.


Share this article :

Post a Comment

 
Support : www.aasathmirror.com | Pusat Promosi
Copyright ©www.aasathmirror.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Modify by