Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
  • உங்கள் பிரதேசத்தில் இடம்பெரும் செய்திகளையும் எங்களுக்கு அனுப்பலாம் e-mail : aasathsmart@yahoo.com phone:+94779028439

நாம் வாழவேண்டும் என்றால் அரசாங்கத்தை ஆதரிக்கக் கூடாது ; சம்பந்தன்

Wednesday, September 110 comments

(vi)
ஆயுதப் போராட்டம் முடி­வ­டைந்து விட்­டது. அது உண்மை ஆனால் நமது போராட்டம் ஆயுதப் போராட்டம் போன்று முடி­வ­டைய முடி­யாது. எமது போராட்டம் ஒரு நியா­ய­மான போராட்டம், நீதி­யான போராட்டம். இந்த மண்ணில் நாம் வாழ வேண்டும். நீங்கள், உங்கள் பிள்­ளைகள், உங்கள் பேரப்­பிள்­ளைகள் இந்த மண்ணில் வாழ வேண்டும் என்றால் நீங்கள் அர­சாங்­கத்தை ஆத­ரிக்கக் கூடாது. தமிழ் மக்­க­ளுக்கு எதி­ராக அர­சாங்கம் செயற்­பா­டு­களில் ஈடு­படும் போது நீங்கள் அவர்­க­ளுக்கு வாக்­க­ளிக்க மாட்­டீர்கள் என நம்­பு­கின்றேன் என்று தமிழ் தேசிய கூட்­ட­மைப்புத் தலைவர் இரா.சம்­பந்தன் தெரி­வித்தார்.


மன்னார் மாவட்­டத்தில் நானாட்டான் அடம்பன் பிர­தே­சங்­களில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் மாகாண சபை தேர்­த­லுக்­கான பிரச்­சார பொதுக்­கூட்டம் வன்னி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் வினோ­­நோ­க­ரா­த­லிங்கம் தலை­மையில் இடம்­பெற்­றது.

இக் கூட்­டத்தில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு தலைவர் இரா.சம்பந்தன், இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்சி பொதுச்­செ­ய­லாளர் மாவை சேனா­தி­ராசா, தமிழ் ஈழ விடு­தலை இயக்கத் தலைவர் செல்வம் அடைக்­க­ல­நாதன், எம்.பிக்­க­ளான எம்.ஏ.சுமந்­திரன், சிவ­சக்தி ஆனந்தன், ப.அரி­ய­நேத்­திரன், மற்றும் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் காந்தா, நல்­லி­ணக்­கத்­திற்­கான மக்கள் இயக்க தலைவர் எம்.பி.எம்.பிர்தௌஸ் ஆகி­யோ­ருடன் மன்னார் மாவட்ட தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் வேட்­பா­ளர்கள் 8 பேரும் கலந்து கொண்டு மேடையில் உரை­யாற்­றினர்.

இங்கு தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் இரா.சம்பந்தன் தொடர்ந்து பேசு­கையில்:

நாடு சுதந்­திரம் அடைந்த பின்னர் இந்த நாட்டில் தமிழ் மக்­க­ளுக்கும் முஸ்லிம் மக்­க­ளுக்கும் தங்கள் உரி­மைகள் இல்­லாமல் போயுள்­ளன. எனவே இந் நாட்டின் ஆட்சி முறை மாற்­றப்­பட வேண்டும். சமஷ்டி ஆட்­சி­முறை மலர வேண்டும். அதி­கா­ரங்கள் பகிர்ந்­த­ளிக்­கப்­ப­ட­வேண்டும் தமிழ்இ முஸ்லிம் மக்­க­ளுக்கு தீர்வு ஏற்­பட வேண்டும் என்ற நிலைப்­பாட்டை முன்­வைத்து நீண்­ட­கா­லமாக போராட்டம் ஒன்று நடை­பெற்­றது.
அதுவும் அர­சியல், ஜன­நா­யக போராட்­ட­மாக நீடித்­தது அத்­துடன் பண்­டார நாயக்­கா­வு­டனும் டட்­லி­யு­டனும் ஒப்­பந்­தங்கள் மேற்­கொள்­ளப்­பட்­டன.

தந்தை செல்வா வட­கி­ழக்கு பகு­தி­களில் எமது நிலம் பாது­காக்­கப்­பட வேண்டும் என்­றுதான் இந்த ஒப்­பந்­தங்­களை மேற்­கொண்டார்.
அன்று முஸ்லிம் தலை­வர்கள் தமி­ழ­ர­சுக்­கட்­சியின் சார்பில் போட்­டி­யிட்டு வெற்­றி­யீட்­டி­னார்கள். கிழக்கு மாகா­ணத்தில் பொத்­துவில், கல்­முனை ஆகிய பகு­தி­களில் இத்­த­கைய வெற்­றிகள் பெறப்­பட்­டன. ஆனால் எதிர்­பார்த்­த­படி ஒப்­பந்­தங்கள் வெற்றி பெறா­மை­யினால் அதி­கா­ரங்­களை பகிர்ந்­த­ளிக்க முடி­யாத நிலை ஏற்­பட்­டது. இதனால் முஸ்லிம் தலை­வர்கள் நாட்டை ஆளும் பெரும்­பான்மை இனத்­த­வர்­க­ளோடு சேர்ந்­­தால்தான் தங்கள் பிரச்­சி­னை­களை தீர்த்­துக்­கொள்­ளலாம் என நினைத்­தார்கள்.

ஆனால் தற்­போது நிலவும் நிலை­மை­களை அவ­தா­னிக்­கின்ற போது முஸ்லிம் தலை­வர்கள் தாங்கள் இருக்கும் நிலை சரியா, பிழையா என சிந்­திக்­கத்­தொ­டங்­கி­யுள்­ளனர். முஸ்லிம் மக்கள் மத்­தியில் தற்­போது நாங்கள் அர­சாங்­கத்­துடன் சேர்ந்து உரி­மை­களை பெறலாம் அல்­லது பாது­காக்­கப்­ப­டலாம் என்ற நிலைப்­பாட்டில் ஐயப்­பாடு தோன்­றி­யுள்­ளது.

தமிழ் மக்கள் மத்­தி­யிலே ஒற்­றுமை இருக்க வேண்­டி­யது அவ­சியம். இன்று இலங்கை அர­சாங்கம் எத்­த­னிக்­கின்­றது தமிழ் மக்­களை பிரிப்­ப­தற்கு. தமி­ழர்­க­ளுக்கு, சில வச­திகள்இ தகு­திகள் வேலை­வாய்ப்­புக்­களை கொடுத்து அவர்­க­ளு­டைய வாக்­கு­களை பெறு­வதன் மூல­மாக தமிழ் மக்­களின் ஒற்­று­மையை குலைக்­கலாம் என்று அர­சாங்கம் நினைக்­கின்­றது.

நாங்கள் எல்­லோரும் பௌத்த பெரும்­பான்­மை­யி­னரை மதிக்­கின்றோம் ஆனால் இவ்­வி­த­மான செயற்­பா­டு­களில் ஒரு அர­சாங்கம் ஈடு­ப­டு­வது நிச்­ச­ய­மாக இது மக்கள் மத்­தியில் ஒரு நன்­ம­திப்பை ஏற்­ப­டுத்தும் விட­ய­மல்ல.

ஆயுத போராட்டம் முடி­வ­டைந்து விட்­டது அது உண்மை. நமது போராட்டம் ஆயுத போராட்டம் போன்று முடி­வ­டைய முடி­யாது. நமது போராட்டம் ஒரு நியா­ய­மான போராட்டம். நீதி­யான போராட்டம் இந்த மண்ணில் நாம் வாழ வேண்டும் நீங்கள் உங்கள் பிள்­ளைகள்இ உங்கள் பேரப்­பிள்­ளைகள் இந்த மண்ணில் வாழ வேண்டும் என்றால் நீங்கள் அர­சாங்­கத்தை ஆத­ரிக்க முடி­யாது. இந்த தேர்­தலில் தமிழ் மக்­க­ளுக்கு எதி­ராக அர­சாங்கம் செயற்­பா­டு­களில் ஈடு­படும் போது நீங்கள் அவர்­க­ளுக்கு வாக்­க­ளிக்க மாட்­டீர்கள்.

Share this article :

Post a Comment

 
Support : www.aasathmirror.com | Pusat Promosi
Copyright ©www.aasathmirror.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Modify by