Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
  • உங்கள் பிரதேசத்தில் இடம்பெரும் செய்திகளையும் எங்களுக்கு அனுப்பலாம் e-mail : aasathsmart@yahoo.com phone:+94779028439

உடைக்கப்பட்ட பள்ளிகள் தொடர்பில் நவனீதம் பிள்ளை அமைச்சர் ஹக்கீமிடம் கேள்வி

Monday, August 260 comments


டாக்டர் ஹாபிஸ்

முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள் மீதான அண்மைக்கால தாக்குதல்கள் குறித்து ஐ. நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவனீதம் பிள்ளை நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இன்று முற்பகல் நீதியமைச்சில் நடைபெற்ற சந்திப்பின் போதே நவனீதம் பிள்ளை அமைச்சர் ஹக்கீமிடம் மேற்படி கேள்வி எழுப்பினார்.

அத்துடன் பேரினவாத அமைப்புக்கள் சில சிறுபான்மை இனங்களுக்கு எதிராக மேற்கொண்டுவரும் பிரச்சாரங்கள் குறித்தும், அதனை கட்டுப்படுத்தவும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஐ. நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவனீதம் பிள்ளை, நீதியமைச்சர் மற்றும் முஸ்லிம்களை பிரதி நிதித்துவம் செய்யும் கட்சியொன்றின் தலைவர் என்ற ரீதியிலும் ஹக்கீமிடம் விளக்கம் கோரியுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள அமைச்சர் ஹக்கீம், மதங்களுக்கு எதிரான பிரச்சாரங்களை கட்டுப்படுத்தவும் அவ்வாறான செயற்பாடுகளை குற்றமாக கருதவும் விசேட சட்டம் ஒன்று கொண்டுவரப்படவுள்ளதாகவும் அதற்கான வரைவு அமைச்சரவையில் சமர்பிக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கமளித்துள்ளார்.

அத்துடன் பள்ளிவாசலகள் மீதான தாக்குதல்கள் குறித்து ஜனாதிபதிக்கு முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கையொப்பமிட்டு மஹஜர் ஒன்றினை அனுப்பியுள்ளதாகவும் அதனூடாக நடவடிக்கை எடுக்கப்படும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் மனித உரிமைகள் ஆணையாளர் நவனீதம் பிள்ளையிடம் ஹக்கீம் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்று காலை இடம்பெற்ற இச்சந்திப்பில் குறித்த விடயங்களுக்கு மேலதிகமாக, பயங்கரவாத தடுப்புச்சட்டம், கருத்துச் சுதந்திரம், காணாமல் போனோர் மற்றும் தடுத்துவைக்கப்பட்டுள்ளோர், இராணுவ மற்றும் பொலிஸாருக்கிடையிலான சிக்கல்கள் , சட்டம் ஒழுங்கு தொடர்பான புதிய அமைச்சு மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்செய்தல் உள்ளிட்ட பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
டாக்டர் ஹாபிஸ்
முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள் மீதான அண்மைக்கால தாக்குதல்கள் குறித்து ஐ. நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவனீதம் பிள்ளை நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இன்று முற்பகல் நீதியமைச்சில் நடைபெற்ற சந்திப்பின் போதே நவனீதம் பிள்ளை அமைச்சர் ஹக்கீமிடம் மேற்படி கேள்வி எழுப்பினார்.

அத்துடன் பேரினவாத அமைப்புக்கள் சில சிறுபான்மை இனங்களுக்கு எதிராக மேற்கொண்டுவரும் பிரச்சாரங்கள் குறித்தும், அதனை கட்டுப்படுத்தவும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஐ. நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவனீதம் பிள்ளை, நீதியமைச்சர் மற்றும் முஸ்லிம்களை பிரதி நிதித்துவம் செய்யும் கட்சியொன்றின் தலைவர் என்ற ரீதியிலும் ஹக்கீமிடம் விளக்கம் கோரியுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள அமைச்சர் ஹக்கீம், மதங்களுக்கு எதிரான பிரச்சாரங்களை கட்டுப்படுத்தவும் அவ்வாறான செயற்பாடுகளை குற்றமாக கருதவும் விசேட சட்டம் ஒன்று கொண்டுவரப்படவுள்ளதாகவும் அதற்கான வரைவு அமைச்சரவையில் சமர்பிக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கமளித்துள்ளார்.

அத்துடன் பள்ளிவாசலகள் மீதான தாக்குதல்கள் குறித்து ஜனாதிபதிக்கு முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கையொப்பமிட்டு மஹஜர் ஒன்றினை அனுப்பியுள்ளதாகவும் அதனூடாக நடவடிக்கை எடுக்கப்படும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் மனித உரிமைகள் ஆணையாளர் நவனீதம் பிள்ளையிடம் ஹக்கீம் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்று காலை இடம்பெற்ற இச்சந்திப்பில் குறித்த விடயங்களுக்கு மேலதிகமாக, பயங்கரவாத தடுப்புச்சட்டம், கருத்துச் சுதந்திரம், காணாமல் போனோர் மற்றும் தடுத்துவைக்கப்பட்டுள்ளோர், இராணுவ மற்றும் பொலிஸாருக்கிடையிலான சிக்கல்கள் , சட்டம் ஒழுங்கு தொடர்பான புதிய அமைச்சு மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்செய்தல் உள்ளிட்ட பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
- See more at: http://www.importmirror.com/2013/08/blog-post_4406.html#sthash.lQCe9xls.dpuf
Share this article :

Post a Comment

 
Support : www.aasathmirror.com | Pusat Promosi
Copyright ©www.aasathmirror.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Modify by