Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
  • உங்கள் பிரதேசத்தில் இடம்பெரும் செய்திகளையும் எங்களுக்கு அனுப்பலாம் e-mail : aasathsmart@yahoo.com phone:+94779028439

கல்ஹின்னையில் ரவூப் ஹகீமினால் திறந்து வைக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸின் அலுவலகம் மீது தாக்குதல்.

Wednesday, August 210 comments

 
கண்டி,கல்ஹின்னையில் அமைச்சர் ரவூப் ஹகீமினால் திறந்துவைக்கப்பட்ட  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் கட்சி அலுவலகம் மீதுநேற்று (20.8.2013 மாலை) தாக்குதல் ஒன்று நடந்ததாக கண்டி மாவட்டத்தின் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் உவைஸ் ரஸான் தெரிவித்தார்.

(நேற்று 20) மாலை அலுவலகத்திற்குள் புகுந்த சுமார் ஐந்து பேர் கொண்ட குழு ஒன்றுஅலுவலகத்தை தாக்கியதாகவும் அப்போது அங்கு வீட்டிருந்த தனது சகோதரரான மொஹமட் சியான் என்பவர் கடுமையாக காயங்களுக்கு உள்ளானதாகவும் அவர் தெரிவித்தார்.

காயமடைந்தவர் அங்கும்புறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும்  முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் உவைஸ் ரஸான் மேலும் தெரிவித்தார். இத் தாக்குதலின் போது அலுவலகத்திலிருந்த உடைமைகளுக்கு பாரியசேதம் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இக் காரியாலயத்தை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதிஅமைசச்ருமானரவுப் ஹகீம் கடந்தஞாயிற்றுக் கிழமை திறந்து வைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.
Share this article :

Post a Comment

 
Support : www.aasathmirror.com | Pusat Promosi
Copyright ©www.aasathmirror.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Modify by