Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
  • உங்கள் பிரதேசத்தில் இடம்பெரும் செய்திகளையும் எங்களுக்கு அனுப்பலாம் e-mail : aasathsmart@yahoo.com phone:+94779028439

ஆளும்தரப்புக்குத் தாவிய ஐவரும் மு.கா.விலிருந்து இடைநிறுத்தம்

Wednesday, August 140 comments


மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடுகளையடுத்து ஆளும்தரப்புக்குத் தாவிய முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர்கள் ஐவரின் கட்சி உறுப்புரிமை இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக கட்சியின் செயலாளர் நாயகம் எம்.ரி.ஹஸன் அலி எம்.பி. குறித்த உறுப்பினர்களுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

கட்சியின் அரசியல் உச்சபீடத்தில் இருந்து நீக்கப்பட்ட ஆப்தீன் எஹியா,  ஏ.எல்.எம். மில்ஹான், எஸ்.எச்.ஏ. கரீம், எம்.கே.எஸ் முனாஜித், எம்.எச்.எம். நஜாத்  ஆகியோருக்கே செயலாளரினால் இவ்வாறு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தற்போது நடைபெறவுள்ள மாகாணசபை தேர்தல்களுக்காக தாக்கல் செய்யப்பட்டுள்ள வேட்புமனுக்களின் வேட்பாளர் பட்டியல்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் புத்தளம், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் தாங்கள் வேறாக கையொப்பமிட்டுள்ளதாக அறியக்கிடக்கிறது.

இத்தேர்தல்களில் தாங்கள் மனுத்தாக்கல் செய்துள்ள மாவட்டங்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து மரச்சின்னத்தில் போட்டியிடுவதற்காக எடுத்துள்ள முடிவை தாங்கள்  உதாசினம் செய்துள்ளதுடன் கட்சியின் யாப்பையும் கட்டுப்பாட்டையும் மீறியுள்ளீர்கள்.  எனவே கட்சியின் யாப்பின் அடிப்படையில் தனக்குள்ள அதிகாரத்தினைப் பாவித்து  தலைவரவர்கள் உடனடியாக அமுலாகும் வண்ணம் தாங்களை அரசியல் உச்சபீட உறுப்பினர்  பதவியிலிருந்து நீக்கியும், கட்சியின் அங்கத்துவத்திலிருந்து இடைநிறுத்தியும்  உள்ளார் என்பதனை அறியத் தருகின்றேன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
.
Share this article :

Post a Comment

 
Support : www.aasathmirror.com | Pusat Promosi
Copyright ©www.aasathmirror.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Modify by