Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
  • உங்கள் பிரதேசத்தில் இடம்பெரும் செய்திகளையும் எங்களுக்கு அனுப்பலாம் e-mail : aasathsmart@yahoo.com phone:+94779028439

புத்­தளம் பிர­சாரக் கூட்­டத்தில் பஷீர் பங்­­கேற்­க­வில்­லை; ஹக்கீம் சாடல்

Monday, August 260 comments


வட மேல் மாகாண சபைக்­கான முஸ்லிம் காங்­கி­ரசின் தேர்தல் பிர­சாரக் கூட்டம் நேற்­றி­ரவு புத்­தளம் நகரில் இடம்­பெற்ற போதிலும் அதில் கட்­சியின் தவி­சா­ள­ரும் அமைச்­ச­ரு­மான பஷீர் சேகு­தாவூத் பங்­கேற்­க­வில்லை எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­ற­து.
 
புத்­தளம் மாவட்­டத்­திற்­கான கட்­சியின் தேர்தல் பிர­சார நட­வ­டிக்­கை­க­ளுக்கு பொறுப்­பா­க அமைச்சர் பஷீர் நிய­மிக்­கப்­பட்­டி­ருந்­த­போ­திலும் கட்சித் தலை­மையுடன் ஏற்­பட்­டுள்ள முரண்­பா­டு­க­ளை­ய­டுத்தே அவர் இக் கூட்­டத்தில் பங்­கேற்­க­வில்லை எனத் தெரி­ய­வ­ரு­கி­ற­து.
 
இக் கூட்­டத்தில் கட்­சியின் தலைவர் அமைச்சர் ஹக்கீம் உரை­யாற்­று­கை­யில், பஷீர் சேகு­தாவூத் தொடர்பில் கடும் விமர்­ச­னங்­க­ளை முன்­வைத்­ததா­க­வும் தெரி­­ய­வ­ரு­கி­ற­து.
 
முஸ்லிம் காங்­கிரஸ் வடக்கில் அர­சாங்­கத்­துடன் இணைந்தே தேர்­தலில் போட்­டி­யிட வேண்டும் என பஷீர் சேகு­தாவூத் வலி­யு­றுத்தி வந்தார். இருப்­­பினும் சகல மாகா­ணங்­க­ளிலும் தனித்தே போட்­டி­யி­டு­வது என கட்சித் தலைமை முடிவெடுத்­தி­ருந்­தது. இந்­நி­லை­யி­­­லேயே புத்­தளம் பிர­சார நட­வ­டிக்­கை­க­ளுக்கு தலைமை தாங்­கு­மாறு  பஷீர் சேகு­தா­வூதிடம் கட்­சியின் செய­லாளர் நாயகம்வேண்­டு­கோள்­வி­டுத்­தி­ருந்தார். இருப்­பினும் மு.கா.வின் தேர்தல் பிர­சா­ர நட­வ­­டிக்­கை­களில் பங்­கே­ற்­பது குறித்து தான் எந்­த­வித தீர்­மா­னங்­க­ளையும் மேற்­கொள்­ள­வில்லை என பஷீர் சேகு­தாவூத் ஊட­கங்­க­ளுக்கு தெரி­வித்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்தக்­க­து.
Share this article :

Post a Comment

 
Support : www.aasathmirror.com | Pusat Promosi
Copyright ©www.aasathmirror.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Modify by