Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
  • உங்கள் பிரதேசத்தில் இடம்பெரும் செய்திகளையும் எங்களுக்கு அனுப்பலாம் e-mail : aasathsmart@yahoo.com phone:+94779028439

கல்முனை இஸ்லாமாபாத்தில் குவாசி நீதிமன்றம்- றவுப் ஹக்கீம் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

Saturday, June 220 comments




கல்முனைத்தொகுதியின் அபிவிருத்திக்குழுத் தலைவரும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் முன்னெடுத்துச் செல்லும் ” ஒளிரும் கல்முனை ” வேலைத்திட்டத்தின் மிக முக்கியமான நிகழ்வொன்று இன்று காலை கல்முனை இஸ்லாமாபாத்தில் இடம்பெற்றது.
கல்முனைப்பிரதேசத்தைச் சேரந்த கல்முனை , சாய்ந்தமருது, நற்பிட்டிமுனை மற்றும் மருதமுனை பிரதேச முஸ்லிம் மக்களின் நீண்டநாள்  தேவைகளுள் ஒன்றாகவிருந்த குவாசி நீதிமன்றம் நீதியமைச்சர் றவுப் ஹக்கீம் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான ஏ.எம்.ஜெமீல், ஏ.எல்.தவம், கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஏ.ஏ.பஷீர் , கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல் , சட்டத்தரணிகளான ஏ.எம்.றகீப் , எம்.எம்.முஸ்தபா , குவாசி நீதவான் அல்ஹாஜ் என்.எம்.இஸ்மாயில் உ்ட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Share this article :

Post a Comment

 
Support : www.aasathmirror.com | Pusat Promosi
Copyright ©www.aasathmirror.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Modify by