அமைச்சர் றவுப் ஹக்கீமை பற்றி நேற்று கோட்டை ரெயில்வே நிலையத்திலும் இன்று விமல் வீரவன்சவின் கட்சிக் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகமாநாட்டிலும் காரசாரமாக சாடல்.
மறைந்த தலைவர் எம்.எச்.எம் அஸ்ரப் அவர்கள் தலைவராக இருந்த காலத்தில்
ஒருபோதும் வட கிழக்கின் ;;இணைப்பை விரும்பவில்லை அத்துடன் ராஜிவ் ஜே.ஆர்
ஒப்பந்தம் செய்யும்போது முஸ்லீம்களை கணக்கில் எடுக்காமல் வட கிழக்கு
இணைக்கப்பட்டதை அமைச்சர் அஸ்ரப் அன்று எதிர்தார். அதற்காகவே முஸ்லீம்
காங்கிரஸ் கட்சியை ஆரம்பித்தார். அவர் ஒரு போதும் வட கிழக்கை இணைப்பை
விரும்பவில்லை அவர் கிழக்கையும் தெற்கையும் இணைக்கும் தொடர்பே அவர் தீர்வாக
விரும்பினார். சிறிது காலம் சென்ற பின் முஸ்லீம் காங்கிரஸ் கட்சியை விட்டு
விட்டு நுஆ என்ற கட்சியை ஆரம்பித்தார். அவர் ஒருபோதும் 13வது சர்த்தையும்
எதிர்த்த ஒரு அரசியல்வாதியாகவே அவர் செயல்பட்டதாக அமைச்சர் விமல்
வீரவன்ச தெரிவித்தார்.
வட கிழக்கு இணைந்திருந்தாhல் தான் அவர் முஸ்லீம் தணியான அலகு கேட்டதாகவும்
அமைச்சர் விமல் நேற்று கோட்டே ரெயில்வே நிலையத்திற்கு முன்பாக
உரையாற்றினார்.
ரீ.என்.ஏ மற்றும் டயஸ்போர மற்றும் நேர்வே போன்ற மேலைத்தேய நாடுகளின்
அடிவருடியாகவும் அமைச்சர் ரவுப் ஹக்கீம் செயல்படுகின்றார். கிழக்கு வடக்கு
வாழ் முஸ்லீம்களை பிழையனதொரு முறைக்கு எடுத்துச் செல்வதாகவும்
தெரிவித்தார்.
முகம்மட் முசம்மில் - தேசிய சுதந்திர முன்னணி இன்று நடைபெற்ற ஊடகவியாளர் மாநட்டின்போது,
அமைச்சர் அஸ்ரபின் திடிர் மரணத்திண்பின் தலைமைத்துவத்தை மிக சூழ்ச்சியாக
ஹக்கீம் கைப்பற்றியதாகவும் தெரிவித்தார். அஸ்ரபின் மரணத்திலும்
றவுப்கக்கீம் தலைமைத்துவத்தை கைபற்றியதிலும் எங்களுக்கு சந்தேகம் உள்ளது.
ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில் பிரபாகரனுடன் ரவுப் ஹக்கீம்;
ஒப்பநத்ம் கைச்சாத்திட்டார். ஏறாவுர் காத்தாண்குடி பள்ளிவாசல்களில்
முஸ்லீம்களை விடுதலைப்புலிகள் சுட்டுக் கொலைசெய்யும்போது இந்த ஹக்கீம்
எங்கு போனார். கிழக்கில் முஸ்லீம்களது காணி சொத்துக்களை சூரையாடும்போது
எங்கு போனார் ? ஹக்கீம் ரீ.என்.ஏ ஏஜென்சாக செயல்படுகின்றார். அவர் கிழக்கை
மீண்டும் வடக்குடன் இணைக்கும் வேலையே அடுத்த வருட முற்பகுதியில் செய்வார்.
எனவும் முசம்மில் கூறினார்.
Post a Comment