Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
  • உங்கள் பிரதேசத்தில் இடம்பெரும் செய்திகளையும் எங்களுக்கு அனுப்பலாம் e-mail : aasathsmart@yahoo.com phone:+94779028439

பதுளையில் பொதுபல சேனாவின் கூட்டத்தில் சொல்லப்பட்ட நச்சு கருத்துக்கள்..!

Sunday, June 160 comments







கோனிபில்லா முறையை ஒழிப்போம் !
காதி நீதிமன்றங்களை இல்லாதொழிப்போம்!!
மதுரசா முறையை இல்லாமலாக்குவோம் !!!
உலமக்களுக்கான பல்கலைகழகத்தை எதிர்போம் !!!! 
தெருக்களில் வேலை செய்யவே முஸ்லிம்கள் இந் நாட்டுக்கு வரவழைக்க பட்டார்கள் !!!!! 
தப்லீக் ஜமாஅத் ஒரு தீவிர வாத இயக்கம்.!!!!!!!

பதுளையிலிருந்து - ஏ எம் எம் முஸம்மில் -

ஒவ்வொருவருக்கும் தமக்கு சொந்தமான சொத்தில் தமது உரிமையை நிரூபிக்க அதற்கான உறுதி பத்திரம் அல்லது “உயில்” இருக்கவேண்டியது கட்டாயமாகும் , நாங்கள் எங்களது சொத்துகளுக்காகவோ பொருட்களுக்காகவோ உரிமத்தை தேடும் போராட்டத்தில் இறங்க வில்லை , மாறாக சிங்களபௌத்தர்கள் என்ற வகையில் இந்த நாட்டின் பூர்வீக குடிகளான எங்களுக்கு இந் நாட்டிலுள்ள உரிமையை பறை சாட்டுகின்றோம்.அதற்காக போராடுகின்றோம் ,
ஒரு நாட்டின் பூர்வீக குடிகள் என்று ஒரு இனத்தை அடையாளப்படுத்த அவ்வினத்தின் பாரம்பரிய கலாசாரம் உறுதிபடுத்தவேண்டும். அவர்களுக்கே அந்த நாடு சொந்தம்  என்று இன்றைய உலகின் அறிஞர்களால் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது, ஆகவே இந் நாட்டின் பௌத்த கலாசார பாரம் பரியத்தை உறுதிப்படுத்திய சிங்கள பௌத்தர்களாகிய எங்களுக்கே இந்த நாடு சொந்தமானதாகும். சிங்கள பௌதர்கலான எங்களுக்கு சொந்தமான இந்த நாட்டின் உரிமத்தை இந் நாட்டின் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை உணர்துவதற்கும் உங்கள் நெஞ்சுகளில் இதை பதியவைக்கும் ஆரம்ப நிகழ்வை இந்த ஊவா வெல்லஸ்ஸ மண்ணிலிருந்து ஆரம்பிக்கவே நாங்கள் இன்று இங்கு வந்துள்ளோம்.

மலையகத்தில் வேலைசெய்ய தமிழர்கள் வரவழைக்கப் பட்டார்கள் , இந் நாட்டின் பாதைகளில் (வீதிகளில்) வேலை செய்ய முஸ்லிம்கள் வரவழைக்கப் பட்டார்கள் சிறுதொகை முஸ்லிம்கள் வியாபார நோக்கில் இங்கு வந்தவர்கள், ஆகவே அவ்வாறு இந் நாட்டுக்கு வருகை தந்தவர்கள் இந் நாட்டின் சொந்தக் காரர்கள் இல்லை, இந்த உண்மைவரலாற்றை சொல்வதற்கு எங்களுக்கு உரிமையுள்ளது. ஆகையினால் இந்த நாட்டின் உண்மை  உரிமையாளர்கள் யார், இந்த நாட்டை வாதிவிடமாக்கிக் கொண்டவர்களும் யார் என்ற வரலாற்றை இந்த நாட்டை ஆளுகின்றவர்களும் ஆழ நினைப்பவர்களும்   அறிந்து கொள்ள வேண்டும் .

இந் நாட்டின் பூர்வீக குடிகளுக்கு உள்ள உரிமைகள் . வந்தேறுகளான இந் நாட்டை வதிவிடமாக்கிக் கொண்டவர்களுக்கு இல்லை . ஒரு நாட்டின் பூர்வீக குடிகளுக்கு நான்கு வகையான உரிமைகள் உள்ளன.

1. பூர்வீகம் சம்பதமான உரிமை 
2. பாரம்பரிய கலாசாரம் பற்றிய உரிமை
3. வரலாறு பற்றிய உரிமை
4. தேசிய ரீதியிலான தீர்மானம் எடுக்ககூடிய உரிமை
இந்த உரிமைகள் இந் நாட்டின் பூர்வீக குடிகளான எங்களுக்கு மறுக்கப்பட்டு , வந்தேறுகளான இந் நாட்டை வதிவிடமாக்கிக் கொண்டவர்களுக்கு வழங்கப் பட்டுள்ள சட்ட அங்கீகாரம்தான் 13வது யாப்பு திருத்தத்தின் மூலம் வலியுறுத்தப் பட்டுள்ளது. ஆகவே  தான் நாங்கள் 13வது யாப்பு திருத்தத்தினை எதிர்கின்றோம். இதற்கு ஆதரவவாக செயற்படும் ராஜித சேனாரத்ன , வாசுதேவ நானயக்கார , திஸ்ஸ விதாரண போன்ற கலப்பு இரத்தம் தனதுடம்பில் ஓடுகின்ற கீழ் தர அரசியல் வாதிகளுக்கு நாம் அதை செய்ய விடமாட்டோம் . அவர்களை வீட்டுக்கு அனுப்பும் செயல்பாட்டை 


நாம் இப்போதிருந்து ஆரம்பித்துள்ளோம். அந்நிய ஆக்கிரமிப்புகளிலிருந்து இந்தநாட்டை பாதுகாக்க பல வரலாற்றுதலைவர்கள் தோன்றிய இந்த ஊவா வெல்லஸ்ஸ மண்ணிலிருது, இன்று அரசியல் செய்யும் பல இழிவானவர்களும் இங்குள்ளார்கள் என்பதையும் நாம் சுட்டிக்காட்டவேண்டும் அவர்கள் தான் இந்த13வது யாப்பு திருத்தத்தினை ஆதரித்து நான் மேலே சுட்டிக்காட்டியவர்களுடன் சேர்ந்து வீதியிலிரங்கி போராட்டம் நடத்தவுள்ளார்கள், இங்குள்ள முதலமைச்சர் சிங்கள இரத்த ஓட்டமுள்ள, கல்வியறிவுடைய  நல்லவர் என்றே கூறவேண்டும், 

   
1972 கொல்வின் ஆர் டி சில்வா இலங்கை அரசியல் யாப்பை வடிவமைக்கும் போது சிங்கள இனம் என்ற அடையாளத்தை அகற்றிவிட்டு இந் நாட்டிலுள்ள எல்லா இனமும் ஒரே இனமாக அடையாளப் படுத்தினார். அதே போல் அப்போதைய கல்வி அமைச்சராக இருந்த பதியுத்தீன் இந் நாட்டு கல்விக் கொள்கையிலிருந்து வரலாறு பாடத்தை அகற்றினார். குறிப்பிட்ட 
காலத்திற்கு பின் கல்வி கற்றவர்களுக்கு இந் நாட்டு வரலாறு பற்றிய அறிவு இல்லை , இந்த செயல் ஆங்கிலேயர் செய்த துரோகத்தையும் விட கொடியதாகும். அந்தகாலதிலிருந்து இவர்கள் சிங்கள இனத்தை இல்லாதொழிக்கும் செயற்பாடுகளையே செய்து வந்துள்ளார்கள் .

  நாங்கள் இப்போது பாரியதொரு பொறியில் சிக்கவைக்கப் பட்டுளோம், அதுதான் இந்தியாவின் ராஜிவ் காந்தி ,ஜே ஆர் ஜெயவர்தன மூலம் இந் நாட்டில்  திணிக்கப்பட்ட 13வது அரசியல் யாப்பு திருத்தத்தம் . இதுதான் வடகிழக்கை இணைத்து தமிழ் ராஜ்ஜியத்தை அடிப்படையாக கொண்ட மாகாண சபை முறை. ஆனால் இந்த மாகாண சபை முறை அறிமுகம் செய்யப்பட காலத்திலிருந்தே வடகிழக்கில்  நடைமுறையில் இருக்க வில்லை , ஆகவே இந்த மாகாண சபை முறை  அந்த காலத்திலேயே செயலிழந்ததாக உள்ளதால் அப்போதே இது கலைக்கப் பட்டு விட்டது என்றே கூற வேண்டும்.
எல் , டீ,  டீ., யினர் இந்த நாட்டை பிரித்து தமிழீழத்தை பெற மூன்று மூல  உபாயங்களை வகுத்திருந்தனர் .
1. யுத்த ரீதியாக தமது இலக்கை அடைதல் 
2. சர்வதேச சக்திகள் மூலம் இலக்கை அடைதல் 
3. இந் நாட்டிலுள்ள அரசியல் தலைவர்களைக் கொண்டு இலக்கை அடைதல்.
 யுத்த ரீதியாக நாம் அவர்களை தோல்வியுறச் செய்தாலும் ஏனைய விடயங்களில் நாம் இச்சதிகளை வெற்றிகொள்ள வில்லை என்பதால் தான் இன்று இந்த நிலைமைகளுக்கு முகம் கொடுத்துள்ளோம். அதனால் தான் 13வது அரசியல் யாப்பு திருத்தத்தை இந் நாட்டு அரசியல் வாதிகள் மூலம் அமுல் படுத்திவிட்டு தமது இலக்கை அடைந்து கொள்ள  இந்த நாட்டை பிரிக்க பார்கின்றார்கள். இந்த அரசியல் வாதிகளால் 13வது அரசியல் யாப்பு திருத்தத்தை ரத்து செய்ய முடியாவிட்டால் நாங்கள் வீதியிலிறங்கி போராட்டம் நடத்தி இதை இல்லாமலாக்குவோம்.

இன்று கிழக்கின் நிலைமை மிகவும் மோசமானதாக உள்ளது .வடக்கிற்கு மாகாண சபையை வழங்கினால் கிழக்கின் நிலைமை இதைவிட மோசமாகி விடும். கிழக்கிலுள்ள எமது பௌத்த வரலாற்று சின்னங்களை மாதத்திற்கு மூன்று என்ற அடிப்படையில் அழித்து நாசமாக்குகின்றார்கள். முஸ்லிம் அடிப்படைவாதம் இந்த நாட்டை சூழ்ந்துகொண்டுள்ளது. எமது இனவிருத்தியை திட்டமிட்டு கட்டுபடுத்தும் செயல் திட்டம் தற்போது அமுலில் உள்ளது. அண்மையில் பேராதெனிய வைத்திய சாலையில் இரண்டு வைத்தியர்கள் இச்செயலில் ஈடுபட்டிருந்த வேலையில் எமது சகோதர வைத்தியர்களால் கண்டுபிடிக்க பட்டுள்ளார்கள் . பதுளை பெரிய வைத்திய சாலையிலும் கடமைபுரியும் அத்தகைய முஸ்லிம் வைத்தியர் ஒருவர் சம்பந்தமாக எமக்கு தகவல் கிடைத்துள்ளது. ஆரோகியமான சுகப் பிரசவத்திற்கு தகுதியான எமது பெண்களை வற்புறுத்தி சீசர் (கத்தரித்தல்) முறையில் அறுவைசிகிச்சை மூலம் மகப்பேற்றை நிகழ்த்துகிறார்கள். நான் அந்த வைத்தியருக்கு பொறுப்புடன் கூறிவைக்க விரும்புகின்றேன் தயவு செய்து அந்த செயல் பாட்டை நிறுத்திவிட வேண்டும் என்று. இல்லாவிட்டால் அவரை சீசர் செய்துவிடுவேன் . 

நாங்கள் இன்று இந்த வரலாற்று பிரசித்தி பெற்ற ஊவா வெல்லஸ்ஸ விற்கு வந்தத காரணம் . எங்கள் முன்னோர்களின் இரத்த வாடையை நுகர்ந்து அதனூடாக, தற்போது நாம் எதிர் நோக்கியுள்ள முஸ்லிம் அடிப்படைவாதம் பற்றிய சவால்களை  உங்களுக்கு தெளிவு படுத்தவே. இன்று இந்த பிரதேசத்தில் தமிழ் ,சிங்கள ,மற்றும் சம்பிரதாய முஸ்லிம்களுக்கு மத்தியில் சுமூக உறவை சீரழித்துள்ள முஸ்லிம் அடிப்படைவாததித்கு எதிராகவே நாம் இன்று செயற் படுகின்றோம்.


நாங்கள் கடந்த வாரம் நாங்கள் கல்முனைக்குச் செல்லவிருந்தோம், ஆனால் எங்கள் ராணுவ அதிகாரிகள், தற்போதைக்கு அங்கு வரவேண்டாம் என்று  எங்களிடம் மண்டியிட்டு வேண்டிக் கொண்டார்கள். அவர்களை அசௌகரியத்தில் மாட்டிவிடக் கூடாது என்ற காரணத்தால் நாங்கள் கல்முனைக்கு செல்வதை சற்று காலம் தாழ்த்தியுள்ளோம். ஆனால் எதிர் வரும் ஜூலை மாதம் 6 ந் திகதி தீகவாப்பியவுக்கு சென்று அடுத்த நாள் 7ந் திகதி காலை  9: 30 மணிக்கு கல்முனை நகரில் எமது பொது பாலா சேனா பொதுக்கூட்டம் நடைபெறும் என்பதையும் அறிவித்துக் கொள்கின்றோம் . அத்துடன் நாங்கள் காத்தான் குடிக்கும் கூடிய விரைவில் வரவுள்ளோம் என்பதையும் இந்த பதுளைமா நகரிலிருந்து பொறுப்புடன் கூறிவைக்கின்றோம் ஆனால் சென்ற வாரம் நாங்கள்  அம்பாறைக்குச் சென்றோம் , அங்கு வந்த கல்முனை தமிழ் சகோதரர்கள் , எங்களை கல்முனை பகுதிக்கு வரச்சொல்லி எங்களிடம் வேண்டுதல் விடுக்கின்றார்கள் . கல்முனையில் வாழும் முஸ்லிம் அடிப்படை வாதிகளால் அவர்கள் துன்புறுத்தப் படுவதாகவும் அப்பிரதேசத்திலிருந்து நாளுக்கு நாள் அவர்கள் துரத்தப் படுவதாகவும் , முஸ்லிம்களின் அடிப்படை வாத செயற்பாடுகளிளிருந்து அந்த தமிழ் சகோதரர்களை பாதுகாத்துக்கொள்ள தமிழ் தேசிய கூட்டமைப்போ , பிள்ளையானோ , தமிழ் அரசியல்வாதிகளோ தேவையில்லை, 

பொது பல சேனா மீது தங்களுக்கு நம்பிக்கையுள்ளது, ஆகவே நீங்கள் கல்முனை பகுதிக்கு வாருங்கள் , உங்களுக்கு காரியாலயங்களை நடத்த நாங்கள் எங்களது வீடுவாசல்களை தருகின்றோம். என்று கூறி எங்களை அழைக்கின்றார்கள்.

கடந்த 11 ந் திகதி காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் ஒரு ஒப்பந்தம் கைச்சாத்தானது , அதுதான் இந் நாட்டில் ஒரு வருடத்திற்கு 1500 உலமாக்கள் வீதம் பத்து வருடங்களில்   15000 உலமாக்களை உருவாக்கும் வகையில் உலமாக்களுக்காக ஒரு பல்கலைக்கழகம் உருவாக்கும் திட்டமாகும். இந்த நாட்டில் இன்று பல்வேறு  எண்ணிக்கையில் பல பகுதிகளில் பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன .  ஆனால் அந்த ஒரு பல் கலை கழகத்திற்கும் எமது சிங்கள தலைவர்களின் பெயர்களை வைக்க வில்லை. அனால் இந்த கேடுகெட்ட அரசியல் வாதிகள் தூங்கிக்கொண்டு இருக்கும் போது சௌதியில் உள்ள அரசன் மலிக் அப்துல்லாஹ் வின் பெயரில் இந்த உலமாக்களுக்கான பல்கலை கழகத்தை கட்டுகிறார்கள் . சௌதி அரேபியாவின் சட்ட ஆலோசகர், இதற்கான  உடன்படிக்கையை கைச்சாத்திட இலங்கை வந்தார். இதில் எங்களுக்குள்ள பிரச்சினை என்னவென்றால் இந்த நாட்டின் முல்லாக்கள் (அறிஞர்கள்) உருவாகாப்பட வேண்டியது சௌதி அரசாங்கத்திற்கு தேவையானவகையிலா ?அல்லது இலங்கைக்கு தேவையான வகையிலா ?என்பதே எமக்குள்ள கேள்வியாகும். இன்று இலங்கைக்கு ஏற்பட்டுள்ள இதே நிலைமை 1982 காலப்பகுதியில் பாகிஸ்தானுக்கும் ஏற்பட்டது , அக்காலத்தில் ஜியாஹுல்ஹாக் மூலம் மதுரசா முறையை பாகிஸ்தானில் அறிமுகப்படுத்தப்பட்டு சௌதி முல்லாகள் பாணியிலான உல மாக்களை அன்று உருவாக்கினார்கள் . அந்த மதரசாக்களில் கால்களை கட்டிவைத்து , தண்ணீர் தொட்டில்களில் (பேசன்களில்) கால்களை போட்டுவைத்து குர் ஆனின் அடிப்படைவாதத்தை போதித்ததன் விளைவு இன்று பாகிஸ்தானை இந்த நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. தலிபான் , அல்கைதா ,அல்ஜிஹாத் , தப்லிக் ஜமாஅத் போன்ற அதி பயங்கரமான இயக்கங்கள் அரசியல் முகத்துடன் பாகிஸ்தானனில் உருவானதும் இதன் காரணமாகத்தான் .    இதை உணர்த்த ஜென்ட்ரல் பேர்வேஷ் முஷாரப் பதவிக்கு வந்தவுடன் 20000 மதுரசாக்களை இழுத்து மூடிவிட்டார் . ஆனால் இன்று இலங்கையில் நடப்பது என்ன , பள்ளி வாயில்களில் சாம்பிரதாய பூர்வமாக நடத்தப்பட்ட மதுரசாக்கள், வேறாக பிரிக்கப்பட்டு  சில்லரைகடைகளைப் போல் ஒவ்வொரு சந்தியிலும் ஆரம்பிக்கப் படுகின்றது. இதன் மூலமாக முஸ்லிம் அடிப்படைவாதம் போதிக்கப் படுகின்றது . இதன் பிரதி பலன் மிகவும் பயங்கரமானது
    
அதேபோல் கடந்த சில தினங்களுக்குமுன் திருகோண மலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரான பாருக் என்பவர் ஒரு மசோதாவை   பாராளுமன்றத்தில் சமர்பித்திருந்தார் . அதில் இந் நாட்டில் செயற்பட்டுக் கொண்டிருந்த மூன்று என் ஜி ஓக்களை அரச ஸ்தாபனங்களாக நிறுவும்முகமாக கோரப்பட்டிருந்தது . சமர்பித்த மசோதாவில் இஸ்லாமிய ஷரியா அடிப்படையிலான சமூக ஒழுக்கங்களை நடைமுறை படுத்தும் நோக்கம் அடிப்படையாகப் முன்வைக்கப் பட்டிருந்தது , அதில் எந்த சமூகத்தை இவர்கள் இஸ்லாமிய அடிப்படையில் வழிநடத்த போகிறார்கள் என்பதை திட்டவட்டமாக குறித்து காட்டவில்லை . அது சிங்கள சமூகமா , தமிழ் சமூகமா , முஸ்லிம் சமூகமா என்பதை திட்டமிட்டு மூடிமரைத்துள்ளார்கள். ஆட்சியாளர்களின் கண்களை கட்டிவிட்டு இவர்கள் செய்யும் இந்த வஞ்சக செயலை எந்தவொரு அரசியல் வாதியும் கண்டுகொள்ள வில்லை. நாங்கள் இவ்வளவு முனைப்புடன் இது பற்றி செயல் படும்போது அரசியல் வாதியான எந்த ஒரு “பறையனும்” இதுபற்றி வாய்திறக்கவில்லை , 


அடுத்ததாக நாங்கள் முகம் கொடுத்துள்ள இன்னுமொரு தலையிடிதான் ,கடந்த காலங்களில் எங்களுக்கு பெரும் இலவாக , எரிச்சலாக தலையிடியாக, பெரும் இடியாக  செயல்பட்டுக் கொண்டிருந்த ஜம்மியத்துல் உலமாவையும் மிஞ்சியதாக , இந்தியாவிலும் பங்களாதேசிலும் கிளர்சிகளை ஏற்படுத்தி இன்று பங்களா தேசில் கிளர்ச்சியாளர்களை மரண தண்டனைக்கு

 உத்தரவிடப் பட்டுள்ள “தப்லிக்ஜமாஅத்” என்ற அமைப்பின் ஊடாக “சூரா சபை” என்று ஒன்றை நிறுவப்போகிறார்கள். இந்த சூரா சபைக்கு ஆலோசகராக செயல்படுபவர், கட்டார் தேசத்தை வசிப்பிடமாக கொண்ட , இஸ்ராயீல் பெண்களுக்கு பிறக்க இருக்கும் குழந்தைகளை அவர்களின் வயிற்றுக்குள்ளேயே கொன்றுவிடுமாறு ஷரியா சட்டத்தின் படி  உத்தரவிட்ட, அதே போல் லிபியாவின் முன்னாள் தலைவர் முஅம்மர் கடாபியை கொன்று விட பணிப்புரை வழங்கிய , “யூசூப் அழ கர்ளாவி” என்பவர் தான் இந்த சூரா சபையின் ஆலோசகர் ஆவார்.    ரவூப் ஹக்கீமின் மைத்துனரான இனாமுல்லா என்பவர்  இலங்கையில் இதற்காக செயற்படுகின்றார், இவற்றின் பயங்கர நிலைமைகளை நாங்கள் மக்களுக்கு வெளிப்படுத்துவது எங்களது கடமையாகும் . 
இன்று ஏறாவூர் காத்தான் குடி பகுதிகளில் வாழும் சம்பிரதாய முஸ்லிம்கள் அப்பகுதிகளில் செயற்படும் காதி நீதி மன்றங்களில் வழங்கப் படும் தீர்புகளினால் பாதிக்கப்பட்டு எங்களிடம் முறைப்பாடு செய்கிறார்கள் , இந்த காதி நீதிமன்றங்கள் எதிர்காலத்தில் பெரும் சவாலாக மாறும் அபாயமுள்ளது.   இந்த காதி நீதி மன்றங்களை இந் நாட்டில் அனுமத்தித்த “மொஹம்மத் அதாவுத செனவி ரத்ன” போன்றவர்கள் இதற்கு பொறுப்பு  கூற வேண்டும்.  நாங்கள் கேகல்லை பிரதேசதிட்கு சென்று அதாவுத செனவிரத்ன பற்றி விசாரிக்கும் போது அப்பகுதி மக்கள் அதாவுத செனவிரத்ன இப்போது இல்லை , அவர் இப்போது “மொஹம்மத் அதாவுத செனவி ரத்ன” ஆகிவிட்டார் என்று கூறுகின்றார்கள். அவர் தான் இந்த காதி நீதி மன்றங் களை நிறுவ வழிசெய்தார்கள். 
இன்று இந்த பதுளை பிரதேசத்திலும் பௌத்த மதத்திற்கு எதிராக    சிங்கள இளைஞர்களை இஸ்லாம் மதத்திற்கு மாற்றுவதற்கான பாரிய சதிகள் நடைபெறுகின்றன, இதற்காக பல புத்தகங்கள் அச்சிட்டு வெளியிடப் படுகின்றன. உங்களில் யாருக்காவது இதுபற்றி தெரியவந்தால் உடனடியாக பன்சாலை ஹாமுதுருவிடம் முறையிடுங்கள் , அல்லது போலீசில் முறைப்பாடு செய்யுங்கள் , இன்று பெரும் விஷப் பாம்புகள் எல்லா இடங்களையும் ஆக்கிரமித்துள்ளன, 

எங்களுக்கு தெரியும் ஊவா மாகாண சபையிலும் தனியான முஸ்லிம் அலகு ஒன்றை நிறுவ சிலர் வெட்கமின்றி வேண்டுதல் விடுத்தார்கள் . ஊவா முதலமைச்சர் அது விடயமாக எடுக்கப் போகும் நடவடிக்கையை நாங்கள் அவதானித்துக் கொண்டிருக்கின்றோம்.

அம்பாறையிலுள்ள  சிங்கள மாணவர்கள் பரீட்சை மண்டபங்களில் அநீதிக்கு உட்படுத்த படுவதை நாங்கள் அம்பாறைக்கு சென்றிருந்த வேலை, அங்குள்ள சிங்கள மாணவர்கள்   எங்களிடம் வந்து முறையிடுகின்ரார்கள், பரீட்சை மண்டபங்களில் சேவைக்கு அமர்த்தப்படும்  முஸ்லிம் உத்தியோகத்தர்கள் , முஸ்லிம்  மாணவர்களுக்கு (பரீட்சார்த்திகளுக்கு) பார்த்து விடைஎழுத உதவி செய்கிறார்கள் ,சில முஸ்லிம் ஆசிரியர்கள் வந்து முஸ்லிம் பரீர்ச்டார்த்திகளுக்காக பரீட்ச்சை எழுதுகிறார்கள். இதனால் சிங்கள மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள் .  இச்செயட்பாட்டினால் பாதிக்கப் பட்ட சிங்கள மாணவர்கள், 2012ம்  ஆண்டின் பரீட்சை பெறுபேறுகளை எங்களிடம் கொண்டுவந்து காட்டினார்கள். அதில் அம்பாறை மாவட்டத்திலிருந்து வைத்திய பீடத்திற்கு மற்றும் ,பொறியியல் பீடத்திற்கு உள்வாங்கப் பட்ட மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 31ஆகும்  அதில் 27 பேர் முஸ்லிம் மாணவர்களாகும்.ஏனையநால்வரில் சிங்களவார்கள்  02 பேர்,  தமிழர் 02 பேராகும். இது முஸ்லிம் அடிப்படைவாதத்தின் அரசியல் நகர்வுகளால் மிகவும் கடினமாகவும் , திட்டமிட்டும் முஸ்லிம் இனத்தை சக்திபெறச் செய்கின்றார்கள், இதன் மூலம் எல்லா அரச துறைகளிலும் அவர்களின் ஆதிக்கம் நிலை பெற்றுள்ளது, 
இன்று இலங்கையில் ஒரு அரசியல் வாதியின் பெயரால் உள்ள ஒரே வைத்திய சாலை கல்முனையிலுள்ள அஷ்ரப் வைத்திய சாலையாகும் , அரச பணத்தால் கட்டப்பட்ட வைத்திய சாலைகுக்கு ஒரு அரசியல் வாதியின் பெயரை வைப்பது எந்த வகையில் நியாயமானதாகும். அந்த வைத்திய சாலையில்  ஏற்கனவே கடமை புரிந்த எமது வைத்திய அன்பர் ஒருவர் கூறுகின்றார் அங்கு சேவையில் ஈடுபட்டிருக்கும்  முஸ்லிம் அல்லாத வைத்தியர்கள், மற்றும்  தாதிமாரை   மிகக் கொடிய முறையில் அவர்களை கேவலப் படுத்தி அடித்து துன் புறுத்தப்படுகிறார்கள் அங்குள்ள முஸ்லிம் உத்தியோகத்தர்கள்  .
எங்களுக்கு இந்த ஹலால் விடயத்திலும் இன்னும் சில தீர்க்கப் பட வேண்டிய பிரச்சினைகளுண்டு ,நாங்கள் பாதுகாப்பு செயலாளருக்கு வாக்குறுதியளித்திருந்தோம் ஹலால் விடயத்தில் நாம் சற்று ஒதுங்கி இருக்கின்றோம் என்று. ஆனால் அந்த ஹலால் மீண்டும் வேறு வேறு வழிகளில் உலாவருவதாக தற்போது அறிகின்றோம். ஆகவே நாங்கள் பாது காப்பு செயலாளரிடம் இதற்கான தீர்வை கேட்கின்றோம், அல்லாவிடின் மீண்டும் நாம் அதை முற்றாக துடைத்தெரிய போராட்டத்தில் இறங்குவோம்.

 நாங்கள் சொல்கின்றோம் இந்த நாட்டுக்கு கோனிபில்லா முறை தேவையில்லை ,  இதுசம்பந்தமாக நாம் மிகவிரைவில் உரியவர்களை சந்தித்து நடவடிக்கை எடுக்க வுள்ளோம் , இந்த நாட்டின் பாதுகாப்பு கருதி வாகனகளிலுள்ள டிண்டேட் ஸ்டிகர் கலை கழட்டமுன் இந்த கோனிபில்லா முறையிலுள்ள நிகாப், புர்கா முறையை கழட்டுங்கள். ஏனென்றால் இது அரேபியா அல்ல . இது பௌத்த நாடு. இதில் பௌத்த மத கலாசார அடிப்படையில் தான் வாழ வேண்டும்.


அத்துடன் நான்   சகோதர தமிழ் மக்களிடம் வேண்டிக்கொள்வது என்னவென்றால் முஸ்லிம் அடிப்படைவாதிகள் இன்று பொது பல சேனா பெயரை பாவித்து  கிழக்கிலுள்ள இந்து கோயில்களை இடித்து நொருக்குகின்றார்கள் , மேலும் முஸ்லிம் அடிபடைவாததால் அதிகமாக பாதிக்கப் பட்ட நீங்கள் முஸ்லிம் அடிப்படை வாதத்தை இல்லாதொழிக்க எங்களுடன் கை கோர்த்து செயற்படுமாறு அழைக்கின்றேன்.
Share this article :

Post a Comment

 
Support : www.aasathmirror.com | Pusat Promosi
Copyright ©www.aasathmirror.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Modify by