Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
  • உங்கள் பிரதேசத்தில் இடம்பெரும் செய்திகளையும் எங்களுக்கு அனுப்பலாம் e-mail : aasathsmart@yahoo.com phone:+94779028439

13 இல் கையை வைத்தால் நீதிமன்றம் செல்வேன்! - அஸாத் ஸாலி

Wednesday, June 120 comments

 

13 வது அரசியல் சட்டத் திருத்தத்தை முற்றாக நீக்குவதற்கோ அல்லது அதனை மாற்றியமைப்பதற்கோ அரசாங்கம் முன்வருமானால், அதற்கெதிராக தான் நீதிமன்றம் செல்லவிருப்பதாக அஸாத் ஸாலி குறிப்பிடுகின்றார்.

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்த்தனவினால் கொண்டுவரப்பட்டஅரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டமானது அரசியலமைப்பை விஞ்சிச் செல்லும் அதிகாரங்களைக் கொண்டுள்ளது என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளதாகக் குறிப்பிடும் அஸாத் ஸாலி,25 வருடங்களாக 8 மாகாணங்களிலும் செயற்பட்டுவந்த இந்த 13 ஆவது திருத்தச் சட்டமானது வடக்கிற்கு மட்டும் ஏன் பொருத்தமற்றது என வினா எழுப்புகிறார்.

எதுஎவ்வாறாயினும், 13ஆவது திருத்தச் சட்டத்தை மீண்டும் மாற்றியமைப்பதற்கு அன்றேல் நீக்குவதற்கு எதிராக அதிகாரத்திலுள்ள அமைச்சர்கள் 20 பேர் எதிராகவுள்ளது தொடர்பில் தான் சந்தோசப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் அரசுடன் இணைந்து வடக்கின் தேர்தலுக்கு ஆயத்தமாகும்போது தானும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் அரசாங்கத்திற்கு பயங்கரவாதிகளாகத் தோற்றமளிப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Share this article :

Post a Comment

 
Support : www.aasathmirror.com | Pusat Promosi
Copyright ©www.aasathmirror.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Modify by