வெசாக்
தினத்தன்று தன்னைத்தானே தீமூட்டிக்கொண்டாதக கூறப்படும் இந்திர ரத்தின
தேரர் உண்மையிலேய அவராக தீக்குளித்துக்கொண்டாரா இல்லை தீமூட்டப்பட்டாரா
என்ற சர்ச்சை தற்போது எழுந்துள்ளது.
இதுகுறித்து சிங்கள இணையமொன்றில்
காட்சிப்படுத்தப்பட்டுள்ள வீடியோவில் வெள்ளைநிற உடையணிந்த ஒருவர் குறித்து
பிக்குவுக்கு தீப்பற்றவைக்கும் காட்சி ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, மாடு அறுப்பதைக் கண்டித்தை
குறித்து பிக்கு தீக்குளித்துக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. போதி
மாதவனின் பாதம்பட்ட இலங்கை பூமியில் மாடு வெட்டுவது தடை செய்யப்பட
வேண்டும். இது சிங்கள பெளத்தர்களின் புனித பூமி என்று தீக்குளித்த பிக்கு
தெரிவித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
(கீழுள்ள வீடியோவில் பிக்குவுக்கு தீமூட்டும் காட்சியை 0.7 ஆவது செக்கனில் பார்க்கமுடியும்)
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=Y8VJ2G4B5wQ#t=0s
இதேவேளை, இலங்கையில் மாடுகளை அறுப்பதை
தடைசெய்ய முடியாதென பொதுநிர்வாக அமைச்சர் ஜோன் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.
மாடுகளை இறைச்சிக்காக அறுப்பது தொடர்பில் சட்டங்களை இயற்றுவது நடைமுறைச்
சாத்தியமற்றது. ஆனால், கொடூரமான முறையில் மாடுகள் கொல்லப்படுவதை
தடுக்கமுடியும் என்று தெரிவித்துள்ளார்
Post a Comment