Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
  • உங்கள் பிரதேசத்தில் இடம்பெரும் செய்திகளையும் எங்களுக்கு அனுப்பலாம் e-mail : aasathsmart@yahoo.com phone:+94779028439

காணி, பொலிஸ் அதிகாரங்கள் குறித்து கோட்டாவுடன் பேச தயாரில்லை!

Monday, May 270 comments


‘வட மாகாணத்துக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட மாட்டாது என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது குறித்து நான் அவரோடு பேச தயாரில்லை. காரணம், அவர் அரசாங்கம் இல்லை’ என்று இலங்கை தமிழரசுக் கட்சின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட பொதுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை, நியூ சில்வர் ஸ்டார் விடுத்தியில் நடைபெற்றது. தேர்தல் பணிகளுக்காக முகவர்களை நியமித்தல், கட்சியின் கிளைகளைப் புனரமைத்தல், தற்கால அரசியல் நிலை என்பவை தொடர்பாக விளக்குவதற்கு இக்கூட்டம் கூட்டப்பட்டது.

இதன்போது உரையாற்றிய இரா. சம்பந்தன்,மேலும் கூறுகையில், ‘தமிழ் மக்களது போராட்டம் ஐக்கிய நாடுகள் சபை வரை சென்றுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை இலங்கைத் தமிழர் விவகாரம் தொடர்பில் விவாதங்களை நடத்தியது. இவ்வாறானதொரு நிலையில், 2 கிலோமீற்றர் வீதிக்காக எமது கொள்கைகளை விட்டுக் கொடுக்க முடியாது’ என்றார்.
‘சம்பூர் பிரதேசத்தில் அனல் மின் நிலையத்திற்காக எடுக்கப்பட்ட 50 ஏக்கர் காணி தவிர எனைய பகுதிகள் விடுவிக்கப்படும் என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ எனக்கு வாக்குறதி அளித்திருந்தார். ஆனால் வாக்குறிதியை மீறி அங்கு நடவடிக்கைகள் எக்கப்படுகின்றது’ என்றும் சம்பந்தன் சுட்டிக்காட்டினார்.

‘வட மாகாணத்துக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட மாட்டாது என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது குறித்து நான் அவரோடு பேச தயாரில்லை. காரணம், அவர் அரசாங்கம் இல்லை’ என்றார்.

‘விடுதலைப் புலிகள் அழிக்கப்படுவதற்கு உதவிய நாடுகள் தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வை முன்வைக்க வேண்டும். இது அமெரிக்காகவா இருந்தாலும், இந்தியாவாக  இருந்தாலும் சரி. எமக்கு தீர்வு ஒன்றே தேவை. அதற்கான கடமைப்பாடு அந்நாடுகளுக்கு உண்டு’ என்றும் வலியுறுத்தினார்.

‘பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதியாக கிடைத்த 5 மில்லியன் ரூபாய்கள், 11 கோயில்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. அரசாங்கத்தோடு இணைந்திருந்தால் 100 மில்லியன் ரூபாய்கள் வரை அபிவிருத்திக்காக கிடைக்கும். இதற்காக எமது கொள்கைகளை விட்டுக் கொடுக்க முடியாது’ என்று அவர் மேலும் தெரிவித்தார்.
Share this article :

Post a Comment

 
Support : www.aasathmirror.com | Pusat Promosi
Copyright ©www.aasathmirror.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Modify by