குற்றப்புலனாய்வு பொலிசாரினால் கைது செய்யப்பட்டு தற்போது கொழும்பு தேசிய
வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ள கொழும்பு மாநகர
சபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலியை பார்வையிட அவரது மனைவி மகள்
உள்ளிட்ட அனைவருக்கும் அனுமதி மறுக்கப்பட்டது.
கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு இன்று இரவு மனைவி மகள் உள்ளிட்ட அவரது
குடும்பத்தினருக்கு பாதுகாப்பு தரப்பு அசாத் சாலியை பார்க்க அனுமதிக்காத
நிலையில் அவர்கள் வைத்தியசாலையில் காத்திருந்ததை அவதானிக்க முடிந்தது.
இதனை தொடர்ந்து அங்கு வருகை தந்த பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி
கருணாநாயக்க, டாக்டர்.ஜயலத் ஜெயவர்த்தன மற்றும் அகில இலங்கை முஸ்லிம்
காங்கிராஸ் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் ஆகியோருக்கும் அனுமதி
மறுக்கப்பட்டது.
அத்துடன் அசாத் சாலி அனுமதிக்கப்பட்டுள்ள 55 வார்ட் பகுதியில் பலத்த
பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment