Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
  • உங்கள் பிரதேசத்தில் இடம்பெரும் செய்திகளையும் எங்களுக்கு அனுப்பலாம் e-mail : aasathsmart@yahoo.com phone:+94779028439

இலஞ்சம் பெற்ற திருமலை குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி கைது

Monday, July 150 comments


திருகோணமலை பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் பிரிவுக்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரி இலஞ்சம் பெற்றார் என்ற குற்றச்சாட்டின் பேரில் இலஞ்ச ஊழல் விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் பிரிவுக்கு பொறுப்பான பொறுப்பதகாரி  பொலிஸ் பரிசோதகர் யு.எம்.அன்வரே  இவ்வாறு லஞ்சம் வாங்கும் போது கைது செய்யப்பட்டவராவார்.
 
வாகன பிரச்சினை ஒன்றை நீதிமன்றின் விசாரணைக்கு விடாமல் கைவிடுவது தொடர்பிலேயே இலஞ்ச தொகை கோரப்பட்டுள்ளது. இது தொடர்பில் வாகனங்களை குத்தகைக்கு விடும் வியாபாரி ஒருவரிடம் கைது செய்யப்பட்டுள்ள  திருகோணமலை பொலிஸ் குற்றவியல் பிரிவுக்கு பொறுப்பான பொறுப்பதகாரி  10 000 ரூபா இலஞ்சத் தொகையை கோரியுள்ளார்.
 
இதனை அடுத்து அவ்வியாபாரி இலஞ்சத் தொகையினை திருகோணமலை மரக்கறி சந்தைக்கு அருகில் வைத்து வழங்க முற்பட்ட போது, அதனை பெற்றுக்கொள்ள  குறித்த பொலிஸ்  அதிகாரி ஸ்தலத்துக்கு வந்துள்ளார். 
 
இந்நிலையில் அங்கு காத்திருந்த இலஞ்ச ஒழிப்பு விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் இலஞ்சத் தொகையினை பெற்றுக்கொள்ளும் போது குறித்த பொலிஸ் அதிகாரியை கைது செய்தமை குறிப்பிடத்தக்கது.
.
Share this article :

Post a Comment

 
Support : www.aasathmirror.com | Pusat Promosi
Copyright ©www.aasathmirror.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Modify by