Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
  • உங்கள் பிரதேசத்தில் இடம்பெரும் செய்திகளையும் எங்களுக்கு அனுப்பலாம் e-mail : aasathsmart@yahoo.com phone:+94779028439

ஹரீஸ் பொய் சொல்கிறார்; ஹக்கீமும் பொய் சொல்கிறார்; -ஆஸாத் சாலி .

Tuesday, June 180 comments


ஹரீஸ் எம்.பி.யும் பொய் சொல்கிறார், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமும் பொய் சொல்கிறார். மொத்தத்தில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியானது பொய்யர்களின் கூடாரமாக மாறியுள்ளது என தேசிய ஐக்கிய முன்னணியின் செயலாளர் நாயகமும் முன்னாள் கொழும்பு மாநர பிரதி மேயருமான அசாத் சாலி தெரிவித்தார்.



“பொதுபல சேனாவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 3 முக்கிய விவகாரங்களை மையப்படுத்தியே பொதுபல சேனாவுக்கு எதிரான வழக்கு தாக்கல் செய்யப்படும்.

பொதுபல சேனாவின் இனவாத நடவடிக்கைகளை நாங்கள் தொடர்ந்தும் அவதானித்து வருகிறோம். தற்போது கல்முனை போன்ற முஸ்லிம் பிரதேசங்களிலும் பொதுபுல சேனா தலைகாட்ட முயல்கிறது.

கல்முனையில் பொதுபல சேனாவின் கூட்டத்தை தடுத்து நிறுத்த ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு படைகளின் உயர் அதிகாரிகளுடனும் தொடர்புகைள ஏற்படுத்தினேன. இதன் காரணமாக அக்கூட்டம் அம்பாறைக்கு இடமாற்றப்பட்டது.


ஆனால் ஹரீஸ் எம்.பி.யோ ஊடகங்களையும் மக்களையும் தவறாக வழி நடாத்தியுள்ளார்.  அவரால் தான் பொதுபல சேனாவின் கூட்டம் அம்பாறைக்கு இடமாற்றப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். இது பொய். இதற்கு முன்னரும் ஹரீஸ் எம்.பி. பொய் சொல்லியுள்ளார். எல்லாவற்றிலும் பொய் சொல்லியே அவர அரசியல் செய்கிறார்.


முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமும் பொய் சொல்கிறார். தற்போது முஸ்லிம் காங்கிரஸ் பொய்யர்களின் கூடாரமாக போயுள்ளது. இவை எல்லாவற்றையும் அம்பலப்படுத்தவே நான் கிழக்கு மாகாணம் சென்று அங்குள்ள முஸ்லிம்களை சந்திக்கவுள்ளேன்’ என்றும் குறிப்பிட்டார்.
Share this article :

Post a Comment

 
Support : www.aasathmirror.com | Pusat Promosi
Copyright ©www.aasathmirror.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Modify by