Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
  • உங்கள் பிரதேசத்தில் இடம்பெரும் செய்திகளையும் எங்களுக்கு அனுப்பலாம் e-mail : aasathsmart@yahoo.com phone:+94779028439

மு.கா. உயர்பீடம் நாளை கூடுகிறது - பசீர் விவகாரம் நிகழ்ச்சி நிரலில் இல்லை

Wednesday, August 280 comments

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டம் நாளை வியாழக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், அக்கடசியின் தவிசாளராக உள்ள பசீர் சேகுதாவூத் குறித்து ஆராய்வதற்கான முன்னேற்பாடுகள் எதுவும் நிகழ்ச்சி நிரலில் இடம்பெறவில்லையென முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஹசன் அலி ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
சில ஊடகங்கள் முஸ்லிம் காங்கிரஸில் பிளவை ஏற்படுத்தி குளிர்காய முயலுகின்றன. அதற்கு நாம் இடமளிக்க கூடாது. முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் நெருக்கடியான இவ்வேளையில் முஸ்லிம் காங்கிரஸில் பிளவு ஏற்படுவதை கட்சிப் போராளிகள் விரும்பமாட்டார்கள். அதேநேரம் கட்சிக் கட்டுப்பாடும் மிகமுக்கியமானது.
நாளை நடைபெறவிருக்கும் முஸ்லிம் காங்கிரஸ்  உயாபீடக் கூட்டத்தில் எவரும் ஹக்கீம் - பசீர் விவகாரம் குறித்து எவரும் பேசுகிறார்களா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் பசீர் விவகாரம் நிகழ்ச்சி நிரலில் இடம்பெறவில்லையெனவும் அவர் மேலும் தெரிவித்தார்
Share this article :

Post a Comment

 
Support : www.aasathmirror.com | Pusat Promosi
Copyright ©www.aasathmirror.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Modify by