Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
  • உங்கள் பிரதேசத்தில் இடம்பெரும் செய்திகளையும் எங்களுக்கு அனுப்பலாம் e-mail : aasathsmart@yahoo.com phone:+94779028439

மின் கட்டண பில்லை பார்த்ததும் அதிர்ச்சியில் மாரடைப்பால் மரணம்

Sunday, June 300 comments

மின் கட்டண பில்லை பார்த்த முதியவர் ஒருவர் அதிர்ச்சியில் மாரடைப்பால் மரணமடைந்தார்.  இலங்கை அரசு சமீபத்தில் மின் கட்டணங்களை உயர்த்தியது. மின் கட்டண உயர்வுக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எரிவாயு மற்றும் நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரித்து வருவதாகவும், மூலப் பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக மின் கட்டணத்தை ஏற்ற வேண்டிய நிலை இருப்பதாகவும் இலங்கை அரசு கூறியது. இதனால் நாடு முழுவதும் 50 சதவீதம் மின் கட்டணம் உயர்ந்துள்ளது.
இந்நிலையில், கொழும்புவில் மின் ஊழியர்கள் ரீடிங் எடுத்தனர். இங்கு சமரதாசா (60) என்பவரின் வீட்டில் ரீடிங் எடுத்து விட்டு பில்லை கொடுத்தனர். அதை வாங்கி பார்த்ததும் சமரதாசா அதிர்ச்சி அடைந்தார். ‘என்ன அநியாயமாக இருக்கிறது? இவ்வளவு கட்டணமா?’ என்று கூறியபடியே நெஞ்சை பிடித்து கொண்டு அப்படியே நாற்காலியில் சரிந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே சமரதாசா உயிரிழந்தார். சமரதாசாவின் வீட்டுக்கு மின் கட்டணம் எவ்வளவு வந்தது என்ற தகவல் வெளியிடப்படவில்லை.
Share this article :

Post a Comment

 
Support : www.aasathmirror.com | Pusat Promosi
Copyright ©www.aasathmirror.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Modify by