
இன்று 23-12-2013 நடைபெற இருந்த கல்முனை மாநகர சபைக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டதை ஆட்சேபித்து ஆளும் கட்சி உறுப்பினர்கள் சிலரும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலரும் இணைந்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இன்று கல்முனை மாநகர சபையின் அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படயிருந்தது.கூட்டம் பி.ப 2.30மணிக்கும் ஆரம்பமாகம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் திடிரென கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மாநகர சபை உறுப்பிர்களுக்கு அறிவிக்கப்பட்டது.இதனை எதிர்த்து இவர்கள் கோசமிட்டதுடன் வரவுசெலவுத்திட்ட முன்மொழிவின் பிரதிகளைக்கிழித்தெறிந்தனர்.
இன்று சமர்ப்பிக்கப்படயிருந்த வரவுசெலவுத்திட்டம் தோற்கடிக்கப்படும் என்று பயந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இவர்கள் குற்றம்சுமத்தினர்.அத்துடன்.நிலைமையை பொலிஸார் தலையிட்டு கட்டுப்படித்தியத்துடன் முதல்வர் நிஸாம் காரியப்பர் மாநகர சபைக்கூட்ட மண்டப முன்னாள் வந்து கூட்டம் ஒரு கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துச்சென்றார்.






Post a Comment