Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
  • உங்கள் பிரதேசத்தில் இடம்பெரும் செய்திகளையும் எங்களுக்கு அனுப்பலாம் e-mail : aasathsmart@yahoo.com phone:+94779028439

மோட்டார் சைக்கிள் பின் ஆசனத்தில் பயணிக்கும் பெண்கள் கால்களை இருபக்கமும் வைத்து அமர வேண்டும் -பொலிசார் தகவல்

Tuesday, July 230 comments

ஹ்
மட்டக்களப்பு மாவட்டத்தில் மோட்டர் சைக்கிளில் பின் ஆசனத்தில் இருந்து செல்லும் பெண்கள் இரண்டு பக்கங்களிலும் கால்களை வைத்து அமர்ந்து செல்ல வேண்டும் எனும் போக்குவரத்து சட்டம் தற்போது அமுலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிசார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மோட்டார் சைக்களில்களில் பின் ஆசனங்களில் இருந்து செல்லும் பெண்கள் ஒரு பக்கம் இருந்தே இதுவரை காலமும் பயணித்து வருகின்றனர்.

தற்போது மோட்டர் சைக்கிளில் பின் ஆசனத்தில் இருந்து செல்லும் பெண்கள் இரண்டு பக்கங்களிலும் கால்களை வைத்து அமர்ந்து செல்ல வேண்டும் என பொலிசார் தெரிவித்துள்ளனர். இது போக்கு வரத்து சட்ட ஒழுங்காகும்.
இந்த போக்கு வரத்து சட்ட ஒழுங்கை மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் போக்குவரத்து பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அபாயா அணியும் முஸ்லிம் பெண்கள் மற்றும் சாரி போன்ற உடை அணிந்து செல்லும் பெண்கள் மோட்டார் சைக்கிளில் பின் ஆசனத்தில் இரண்டு பக்கமும் கால்களை வைத்து பயணிப்பதற்கு சிரமப்படுவது குறிப்பிடத்தக்கது.
Share this article :

Post a Comment

 
Support : www.aasathmirror.com | Pusat Promosi
Copyright ©www.aasathmirror.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Modify by