Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
  • உங்கள் பிரதேசத்தில் இடம்பெரும் செய்திகளையும் எங்களுக்கு அனுப்பலாம் e-mail : aasathsmart@yahoo.com phone:+94779028439

இலத்திரனியல் அடையாள அட்டைக்கு முஸ்லிம்கள் எதிர்ப்பு..

Monday, December 160 comments

nic
2014ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வரவுள்ள இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைக்கு முஸ்லிம்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

இந்த புதிய அடையாள அட்டையில் முஸ்லிம் ஆண்கள் அணியும் தொப்பியும் பெண்கள் அணியும் பர்தாவும் கொண்ட புகைப்படங்கள் இருக்கமாட்டாது என ஆட்பதிவு திணைக்களம் அண்மையில் அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பினை அடுத்தே முஸ்லிம்கள் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் புதிய தேசிய அடையாள அட்டையில் முஸ்லிம்களின் அடையாளத்துக்கு தடை இருக்குமானால் முஸ்லிம்கள் அதனை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.

தொப்பியோ அல்லது பர்தாவோ முகத்தை மறைப்பது அல்ல என்றும் ஓராண்டுக்கு முன்னர் ஏற்கனவே இதுபோன்ற பிரச்சனை எழுந்தபோது, பாதுகாப்பு அமைச்சின் செயலாளருடன் பேசி தீர்வு காணப்பட்டது போல் இதற்கும் தங்களால் தீர்வு காண முடியும் என பிரதி அமைச்சர்  நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

“இந்தப் பிரச்சினை முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல ஏனைய மதங்களுக்கும் உள்ளது. குறிப்பாக, கத்தோலிக்க அருட் சகோதரிகளுக்கு கூட ஏற்படலாம் என்பதால் இதற்கு சகல தரப்பினரும் இணைந்து தீர்வுகாண வேண்டியதன் அவசியம்” பற்றியும் அவர் சுட்டிக்காட்டினார்.இதேவேளை, புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள இலத்திரனியல் தேசிய அடையாள அட்டையில் காணப்படும் புகைப்படத்தில் எந்தவொரு மதத்தையோ சமூகத்தின் கலாசாரத்தையோ பிரதிபலிக்கும் வகையிலான எந்தவொரு அடையாளமும் இருக்கமாட்டாது என ஆட்பதிவு தினைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஆர். எம். எஸ். சரத்குமார தெரிவித்திருந்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்துக்கு நேற்று சனிக்கிழமை சென்றிருந்த ஆட்பதிவு தினைக்களத்தின் ஆணையாளர், அடுத்த ஆண்டு ஜுன் மாதம் தொடக்கம் இந்த இலத்திரனியல் அடையாள அட்டை நடைமுறைக்கு வரும் என்றார்.
‘கலாசாரத்திற்கும் தேசிய அடையாள அட்டைக்கும் தொடர்பு இல்லை.முகத்தை வைத்து அடையாளம் காணும்போது தொப்பி அல்லது ஏனையவற்றை தலையில் அணிவதால் ஆட்களை அடையாளம் காண்பதில் சிரமங்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக சோதனைகளின் போது இப்படியான கஷ்டங்கள் ஏற்படுகின்றன என ஆட்பதிவுகள் ஆணையாளர் குறிப்பிட்டார்.

சட்டத்தை அமுல்படுத்துவதே தனது கடமை என்றும் அதில் மாற்றங்களோ அல்லது திருத்தங்களோ செய்வதற்கு தனக்கு அதிகாரம் இல்லை என்று அவர் மேலும் தெரிவித்தார். (பிபிசி தமிழோசை)
Share this article :

Post a Comment

 
Support : www.aasathmirror.com | Pusat Promosi
Copyright ©www.aasathmirror.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Modify by